புருண்டியில் சோகம்: வெள்ளத்தில் சிக்கி 13 சுரங்க தொழிலாளர்கள் பலி


புருண்டியில் சோகம்: வெள்ளத்தில் சிக்கி 13 சுரங்க தொழிலாளர்கள் பலி
x

ஆப்பிரிக்க நாடான புருண்டியில் வெள்ளத்தில் சிக்கி 13 சுரங்க தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

கிடேகா,

ஆப்பிரிக்க நாடான புருண்டியில் சுரங்க தொழிலாளர்கள் பலர் சட்ட விரோதமாக குழிகள் தோண்டி அதில் இருந்து தங்கத்தை எடுப்பதாக குற்றச்சாட்டு உள்ளது. வடமேற்கு மாகாணமான சிகிடோகியில் இரவு நேரத்தில் குழிகளை தோண்டி பலர் தங்கத்தை எடுத்துக் கொண்டிருந்தனர். தற்போது அங்கு மழைக்காலம் என்பதால் ருகோகோ ஆற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் அவர்கள் தோண்டி வைத்திருந்த 2 சுரங்க குழிக்குள் தண்ணீர் சென்று அந்த குழிகள் இடிந்து விழுந்தன.

இது குறித்து தகவலறிந்த மீட்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். எனினும் குழிகளில் சிக்கி 13 பேர் உயிரிழந்தனர். மேலும் சிலர் மாயமானதாக கூறப்படுகிறது. அவர்களை மீட்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர்.


Next Story