போதை மருந்து கொடுத்து 5 கொரிய பெண்கள் பலாத்காரம் பா.ஜ.க பிரமுகர் குற்றவாளி...!


போதை மருந்து கொடுத்து 5 கொரிய பெண்கள் பலாத்காரம் பா.ஜ.க பிரமுகர் குற்றவாளி...!
x

போதை மருந்து கொடுத்து 5 கொரிய பெண்கள் பலாத்காரம் பா.ஜ.க பிரமுகர் குற்றவாளி என ஆஸ்திரேலியா கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது

சிட்னி

ஆஸ்திரேலியாவில் பாஜகவின் வெளிநாடு வாழ் நண்பர்கள் அணியின் முன்னாள் தலைவராக இருந்தவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பாலேஷ் தன்கர் (43) இவர் அங்கு 5 கொரிய பெண்களுக்கு போதை மருந்தை கொடுத்ததாக தெரிகிறது. அவர்கள் மயங்கி தள்ளாடியதை பயன்படுத்திக் கொண்ட பாலேஷ் அவர்களை பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் மீது ஏராளமான பாலியல் வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரியவந்தது. கடந்த 2018 ஆம் ஆண்டு பெண்களுடன் தனிமையில் இருந்ததை வீடியோ எடுத்து தனது செல்போனில் வைத்திருந்து உள்ளார்.அதை போலீசார் கைப்பற்றி உள்ளனர்.பாலேஷ் தன்கர் 2018 ஜனவரி மற்றும் அக்டோபர் 2018 க்கு இடையில் 13 கற்பழிப்பு வழக்குகள் உட்பட 39 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு உள்ளது.

அந்த வீடியோக்களில் பலேஷ் தன்னை நம்பி வரும் பெண்களுக்கு போதை மருந்தை கொடுக்கிறார். அதில் மயங்கும் பெண்களை பலாத்காரம் செய்கிறார். பின்னர் அலாரம் கடிகாரம் மற்றும் செல்போன் ஆகியவற்றின் பின்புறம் மறைத்து வைத்திருந்த தனது கேமராவில் வீடியோவும் எடுத்துக் கொள்கிறார். அவ்வாறு போலீசார் ஏராளமான வீடியோக்களை கைப்பற்றியுள்ளனர்.கொரிய மொழிபெயர்ப்பாளர்களுக்கான போலியான வேலை வாய்ப்பு விளம்பரத்துடன் பாலேஷ் தனது லீலைகளை அரங்கேற்றி உள்ளார்.

அந்த வீடியோக்களில் ஒரு வீடியோ 95 நிமிடங்களுக்கு ஓடக் கூடியது. அதில் மயங்கி கிடந்த பல பெண்களுடன் பாலேஷ் உறவு வைத்துக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரியப் பெண்களுடன் தன்கர் உடலுறவு கொள்ளும் 47 வீடியோக்களை அவரது கம்ப்யூட்டரில் போலீசார் கண்டுபிடித்தனர்.

இதையடுத்து கைது செய்யப்பட்ட அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவர் கண்கலங்கினார். மேலும் பல்வேறு பொய்களை கூறி 5 கொரிய பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் உறுதியாகியுள்ளது என தீர்ப்பளித்தனர்.

விசாரணையில் அவர் அழுதபடியே நான் பெண்களிடம் நிறைய பொய்களை கூறியுள்ளேன். எனது திருமண வாழ்க்கை கசப்பாக இருந்ததால் நான் வேறு ஒருபெண்ணுடன் தொடர்பில் இருந்தேன்.

ஆனால் அந்த பெண்ணும் என்னை ஒரு சிறிய பிரச்சினைக்காக விட்டுவிட்டு சென்றுவிட்டார். இதனால் நான் தனிமையில் வாடியதால் பெண்களிடம் நான் பொய் கூறியதாக கண்ணீர் மல்க கூறினார்.

சில நேரங்களில் மயக்கமடையும் பெண்களை பலாத்காரம் செய்யும் பாலேஷ் பல சமயங்களில் போதை மருந்து கொடுத்து மயங்காத பெண்களை வலுக்கட்டாயமாக பலாத்காரம் செய்த சம்பவங்களும் நடந்துள்ளன.

பாலேஷ் கொரிய பெண்களை பலாத்காரம் செய்து எடுத்த வீடியோக்களை தனித்தனியே போல்டர் போட்டு வைத்துள்ளார். அதில் சம்பந்தப்பட்ட கொரிய பெண்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த வீடியோக்கள் ஆபாச வீடியோக்கள்தான் என்று பாலேஷ் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சம்பவத்தை விவரித்த நாளேடுகள் ஆஸ்திரேலியாவில் மிகவும் மோசமான பாலியல் குற்றவாளிகளில் பாலேஷும் ஒருவர் என விவரித்துள்ளன.

தன்கர், மே மாதம் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படுவார் மேலும் அந்த ஆண்டின் பிற்பகுதியில் தண்டனை வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.


Next Story