ரஷிய அதிபர் புதினுக்கு ஆதரவு அளித்த செச்சன் தலைவர்


ரஷிய அதிபர் புதினுக்கு ஆதரவு அளித்த செச்சன் தலைவர்
x

உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷிய அதிபர் புதினுக்கு செச்சன் தலைவர் ஆதரவு அளித்து உள்ளார்.

மாஸ்கோ,

உக்ரைனுக்கு எதிரான ரஷியாவின் போரில் வாக்னர் எனப்படும் கூலிப்படை அமைப்பு ரஷியாவுடன் இணைந்து உக்ரைன் மீது கொடூர தாக்குதலை நடத்தியது. கடந்த ஆண்டு உக்ரைனின் பல முக்கிய பகுதிகளை கைப்பற்ற உதவிய வாக்னர் அமைப்பு ரஷிய கொடியை நாட்டவும் செய்தது.

இந்த நிலையில், எவ்ஜெனி பிரிகோஜின் தலைமையிலான இந்த கிளர்ச்சி படையினர் திடீரென ரஷியாவுக்கு எதிராக திரும்பி அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

இந்த சூழலில் செச்சன் நாட்டு அதிபர் ரம்ஜான் கதிரோவ் இன்று கூறும்போது, எவ்ஜெனி பிரிகோஜின் தலைமையிலான புரட்சி படையின் கிளர்ச்சியை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு உதவ தயாராக இருக்கிறேன் என கூறியுள்ளார்.

தேவைப்பட்டால் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள உதவவும் தயாராக இருக்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.

இதுபற்றி டெலிகிராமில் கதிரோவ் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், பிரிகோஜினின் நடவடிக்கைகள் முதுகில் குத்துவது போன்று உள்ளன. ரஷிய படையினர் தொடர்ந்து உறுதியாக இருக்க வேண்டும் என வலியுறுத்தியதுடன், எந்தவித கோபமூட்டும் செயல்களுக்கும் இரையாகாமல் தவிர்த்திடல் வேண்டும் என்றும் தெரிவித்து உள்ளார்.

பிரிகோஜின் உடன் கூட்டணியாக செயல்பட்டவர் என இதற்கு முன்பு கருதப்பட்ட கதிரோவ், புதினின் நம்பிக்கைக்குரிய ஆதரவாளராகவும் உள்ளவர். அவர், செசன்ய படைகளை தயாராக இருக்கும்படி உத்தரவிட்டு உள்ளார்.

சமீப வாரங்களாக, கதிரோவ் உடன் கைகோர்த்து உள்ள செச்சனிய தளபதிகள், பிரிகோஜனின் பாதுகாப்பு அமைச்சகத்திற்கு எதிரான விமர்சனங்களுக்கு தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இதனால், உள்நாட்டு போர் மூள கூடிய ரஷியாவுக்கு ஆதரவாக செசன்ய படைகள் செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story