வங்கி ஊழியர்களை துப்பாக்கி முனையில் சிறைப்பிடித்த வாடிக்கையாளர் - லெபனானில் பரபரப்பு


வங்கி ஊழியர்களை துப்பாக்கி முனையில் சிறைப்பிடித்த வாடிக்கையாளர் - லெபனானில் பரபரப்பு
x

கோப்புப்படம்

வைப்புதொகையை எடுக்க கட்டுப்பாடு விதிக்கப்பட்டதால் வங்கி ஊழியர்கள் அனைவரையும் துப்பாக்கி முனையில் சிறைப்பிடித்தார்.

பெய்ரூட்,

லெபனான் நாட்டில் கடும் நிதி நெருக்கடி நிலவி வருகிறது. அந்த நாட்டின் பணம் 90 சதவீதத்துக்கும் அதிகமாக மதிப்பிழந்துள்ளது. இதனால் அந்த நாட்டு மக்கள் வங்கிகளில் இருக்கும் தங்களின் வைப்புதொகையில் இருந்து குறிப்பிட்ட தொகையை மட்டும் எடுக்கும் வகையில் அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

இந்த நிலையில் லெபனானின் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள ஒரு வங்கியில் 2 லட்சத்து 10 ஆயிரம் டாலர்களை வைப்பு தொகையாக வைத்துள்ள இளைஞர் ஒருவர் மருத்துவ செலவுக்காக பணம் எடுக்க வங்கிக்கு சென்றுள்ளார். ஆனால் அவர் அதிக தொகையை கேட்டதால் வங்கி ஊழியர்கள் பணம் வழங்க மறுத்துவிட்டனர்.

இதனால் கோபத்துடன் வங்கியை விட்டு சென்ற அந்த இளைஞர் கையில் துப்பாக்கியுடன் மீண்டும் வங்கிக்கு வந்தார். தான் கேட்ட தொகையை தரும்படி கூறி வங்கி ஊழியர்கள் அனைவரையும் துப்பாக்கி முனையில் சிறைப்பிடித்தார். இதனால் பெரும் பரப்பு ஏற்பட்டது.

அதை தொடர்ந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் வங்கி ஊழியர்களை சிறைப்பிடித்த இளைஞரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். நீண்ட இழுபறிக்கு பிறகு இளைஞருக்கு 35,000 டாலர்களை வழங்க வங்கி அதிகாரிகள் சம்மதித்தனர். அதை தொடர்ந்து சுமார் 6 மணி நேரமாக சிறைப்பிடித்து வைத்திருந்த ஊழியர்களை அவர் விடுவித்தார். இந்த சம்பவத்தால் பெய்ரூட்டில் பல மணி நேரம் பரபரப்பு நிலவியது.


Next Story