சூரியனில் இருந்து நாளை தொலை தூர நிலைக்கு செல்லும் பூமி...! குளிர் அதிகரிக்க வாய்ப்பு...!


சூரியனில் இருந்து நாளை தொலை தூர நிலைக்கு செல்லும் பூமி...!  குளிர் அதிகரிக்க வாய்ப்பு...!
x

சூரியனில் இருந்து பூமி தனது உச்சப்பட்ச தூரத்தை அடைவதால் குளிர்ச்சி அதிகரிக்கும்.

புதுடெல்லி,

சூரியனை பூமி உள்ளிட்ட கோள்கள் சுற்றி வருகின்றன. சூரியனை சுற்றியுள்ள பூமியின் சுற்று வட்ட பாதை ஒரு சரியான வட்டமானதால் 0.0167 நீள்வட்ட அளவுடன் சிறிது ஓவல் வடிவத்தில் இருக்கும். பூமி, ஒரு வருடத்தில் சூரியனில் இருந்து அதன் தொலை தூர நிலைக்கு செல்லும். இது அல்பெலியன் என்று அழைக்கப்படும். பூமி சூரியனுக்கு மிக அருகில் இருப்பதை பெரிஹேலியன் என்று அழைக்கப்படும். அல்பெலியன் பொதுவாக ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 6-ந்தேதியும், பெரிஹேலியன் ஜனவரி 2-ந்தேதி தொடங்கும். பூமியில் இருந்து சூரியனுக்கான சராசரி தூரம் 150 மில்லியன் கிலோமீட்டர் தூரம் ஆகும். அல்பெலியன் நிலையில் இருக்கும் போது 152 மில்லியன் கிலோ மீட்டர் தூரமாக மாறும். பின்னர் அது ரெிஹேலியன் நிலையில் இருக்கும் போது பூமியில் இருந்து சூரியனுக்கான தூரம் 147 மில்லியன் கிலோ மீட்டர் ஆகும்.

அல்பெலியன் மற்றும் பெரிஹெலியன் இடையே உள்ள வேறுபாடு 5 மில்லியன் கிலோ மீட்டர் தூரம். பூமி, அல்பெரியன் நிலையில் இருக்கும்போது வழக்கத்தை விட குளிர் அதிகம் இருக்கும். இந்த நிலையில் இந்த ஆண்டு சூரியனில் இருந்து பூமி மிக தொலை தூர புள்ளியான அல்பெலியன் நிலையை நாளை (திங்கட்கிழமை 4-ந்தேதி) அடைகிறது.

இது வருகிற ஆகஸ்டு 22-ந்தேதி முடிவடையும். அல்பெலியன் நிகழ்வு நாளை காலை 5.27 மணிக்கு தொடங்கும். அதன்படி நாளை முதல் பூமி, சூரியனில் இருந்து 15 கோடியே 20 லட்சத்து, 98 ஆயிரத்து 455 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் சூரியனுக்கும், பூமிக்கும் இடையே உள்ள தூரம் 9 கோடி கிலோ மீட்டர் ஆகும். ஆனால் அல்பெலியன் நிகழ்வு காலத்தில் 15.20 கோடி கி.மீ. தூரமாக அதிகரிக்கும். சுமார் 66 சதவீதம் தூரத்தின் அளவு அதிகரிக்கும்.சூரியனில் இருந்து பூமி தனது உச்சப்பட்ச தூரத்தை அடைவதால் குளிர்ச்சி அதிகரிக்கும்.அல்பெலியன் கால கட்டத்தில் உடல்வலி, காய்ச்சல், இருமல் மற்றும் சுவாச பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு அதிகம். எனவே வைட்டமின்கள் மற்றும் பிற ஆரோக்கியமான உணவுப் பொருட்களுடன் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவது நல்லது என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.


Next Story