தேவைப்பட்டால் உக்ரைன் மீது அணு ஆயுதங்களைப் பயன்படுத்தவும் ரஷியா தயங்காது-பெலாரஸ் அதிபர்


தேவைப்பட்டால் உக்ரைன் மீது அணு ஆயுதங்களைப் பயன்படுத்தவும் ரஷியா தயங்காது-பெலாரஸ் அதிபர்
x

தேவைப்பட்டால் உக்ரைன் மீது அணு ஆயுதங்களைப் பயன்படுத்தவும் ரஷியா தயங்காது என பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோ தெரிவித்துள்ளார்.

மாஸ்கோ

உக்ரைனை குறிவைத்து தாக்க உள்ள பெலாரஸ் எல்லையில் அணு ஆயுத ஏவுகணைகள் நிறுத்தப்பட்டுள்ளன. உக்ரைனுக்கு அழுத்தம் கொடுப்பதற்கான ஒரு உத்தி என்று இதுவரை நம்பப்பட்டது. ஆனால் தற்போது பெலாரஸின் அறிக்கை உலகையே அதிர வைத்துள்ளது.

அலெக்சாண்டர் லுகாஷென்கோ புதினின் சிறந்த நண்பர்களில் ஒருவர். அத்தகைய சூழ்நிலையில் அவரது கூற்றில் அதிக அளவு உண்மை இருக்கலாம் என கூறப்படுகிறது.

ஷெலன்ஸ்கை கிராமத்தின் மீது ரஷியா பெரிய ஏவுகணைத் தாக்குதலை நடத்தி ரஷியா தனது விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. 28 பேர் காயமடைந்துள்ளனர் மற்றும் பல கட்டிடங்கள் இடிந்துள்ளன.

ஆக்கிரமிப்பு ஏற்பட்டால் அணு ஆயுத தாக்குதலை தவிர்க்க முடியாது என்று பெலாரஸ் அதிபர் கூறி உள்ளார்.

பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோ, தனது நாட்டின் மீது ஆக்கிரமிப்பு ஏதேனும் நடந்தால், அணு ஆயுதங்களைப் பயன்படுத்த தயங்க மாட்டோம் என எச்சரித்துள்ளார். மேலும் இதுகுறித்து கூறுகையில்

''அணு ஆயுதங்களைப் பயன்படுத்த வேண்டிய ஒரு அவசியத்தை கடவுள் ஏற்படுத்தாமல் இருக்க வேண்டும். ஆனால் எங்கள் நாட்டின் மீது ஆக்கிரமிப்பு நடந்தால் அதை எதிர்கொள்ள நாங்கள் தயங்க மாட்டோம்.

ரஷிய அதிபர் புதினை தனது பெலாரஸ் நாட்டில், தந்திரோபாய அணு ஆயுதங்களை நிலைநிறுத்துமாறு தாம்தான் கேட்டுக் கொண்டதாகவும், தனது நாட்டின் மீது தாக்குதலோ, ஆக்கிரமிப்போ நடக்க மிகவும் அதிக சாத்தியக்கூறுகள் இருப்பதால் இதை செய்ததாகவும், இத்தகைய ஆயுதங்களைக் கொண்ட ஒரு நாட்டை எதிர்த்துப் போராட எந்த நாடும் முன்வராது என்றும், இவை தாக்குதலை தடுக்கும் ஆயுதங்கள் எனக் கூறினார்.

தற்போது ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அணு ஆயுதங்களை நிலை நிறுத்துவதற்கான தேதியையும் அறிவித்து உள்ளார். இது உலகம் முழுவதும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. ரஷியா ஜூலை 7-8 தேதிகளில் பெலாரசில் மூலோபாய அணு ஆயுதங்களை நிலைநிறுத்தத் தொடங்கும் என்று புதின் கூறினார். அதாவது, பெலாரஸின் எல்லைப் பகுதிகளில் ரஷிய அணு ஆயுதங்கள் நிலைநிறுத்தப்படும், இது உக்ரைனை எந்த நேரத்திலும் அழிக்கலாம். ரஷியாவின் இந்த நடவடிக்கையால், அணு ஆயுதப் போருடன் உலகப் போர் அபாயமும் அதிகரித்து வருகிறது.


Next Story