ஐரோப்பிய நாடுகளில் கொரோனா சான்றிதழ் பயன்பாடு நீட்டிப்பு


ஐரோப்பிய நாடுகளில் கொரோனா சான்றிதழ் பயன்பாடு நீட்டிப்பு
x

கோப்புப்படம்

ஐரோப்பிய நாடுகளில் கொரோனா சான்றிதழ் பயன்பாடு நீட்டிக்கப்பட்டுள்ளது.

பிரசல்ஸ்,

ஐரோப்பிய நாடுகளில் ஒருவர் கொரோனா தொற்றுக்கு எதிராக தடுப்பூசி செலுத்திக்கொண்டு விட்டார் அல்லது அவருக்கு சமீபத்தில் எடுக்கப்பட்ட பரிசோதனையில் 'நெகட்டிவ்' முடிவு வந்துள்ளது அல்லது கொரோனா தொற்றில் இருந்து விடுபட்டுவிட்டார் என்று காட்டுகிற வகையில் கொரோனா சான்றிதழ் வழங்கி அது பயன்பாட்டில் இருந்து வருகிறது. ஐரோப்பிய கூட்டமைப்பில் உள்ள 27 நாடுகள் தங்கள் குடிமக்களுக்கு இந்த கொரோனா சான்றிதழ்கள் வழங்குகின்றன.

இது ஐரோப்பிய கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள நாடுகளுக்கு இடையே பயணம் மேற்கொள்வதற்கு அவசியமாகிறது.

தற்போது ஐரோப்பிய நாடுகளில் கோடை விடுமுறை தொடங்க உள்ள நிலையில், தொற்று மீண்டும் எழுச்சி பெறத்தொடங்கி உள்ளது. இந்த நிலையில்தான் கொரோனா சான்றிதழின் பயன்பாடு மேலும் ஓராண்டுக்கு, அடுத்த ஆண்டு ஜூன் வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடுகள் இதுவரையில் 200 கோடி கொரோனா சான்றிதழ்கள் வழங்கி உள்ளன.


Next Story