ஆர்மேனியா ராணுவ என்ஜினீயரிங் நிறுவனத்தில் தீ - 15 படை வீரர்கள் உயிரிழப்பு

படுகாயம் அடைந்த 3 வீரர்கள் உடனடியாக மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.
யெரெவன்,
ஆர்மேனியாவில் அஸாட் என்ற இடத்தில் உள்ள ராணுவ என்ஜினீயரிங் தொழிற்சாலையில் நேற்று திடீரென தீப்பிடித்தது. இந்தத் தீ மின்னல் வேகத்தில் பரவியது. இந்த விபத்தில், அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த படை வீரர்கள் 15 பேர் சிக்கி பலியாகினர்.
மேலும் 3 வீரர்கள் படுகாயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அவர்களது நிலை கவலைக்கிடமாக உள்ளது. இந்த தீ விபத்தின் பின்னணி என்ன என்பது குறித்து உடனடியாக தெரியவரவில்லை.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





