ஹாரி சுயசரிதையில் கிளுகிளுப்பான அத்தியாயம்...! "புல்வெளியில் உடலுறவு" மூத்த பெண்ணிடம் கன்னித்தன்மையை இழந்தேன்


ஹாரி சுயசரிதையில் கிளுகிளுப்பான அத்தியாயம்...! புல்வெளியில் உடலுறவு மூத்த பெண்ணிடம் கன்னித்தன்மையை இழந்தேன்
x

புத்தகத்தில் ஒரு முக்கிய கருப்பொருள், அவரது தாயார் இளவரசி டயானாவின் இழப்பு அவருக்கு ஏற்படுத்திய தீர்க்கப்படாத துயரத்தின் உணர்வுமனஉளைச்சல் காயம்" இருப்பதாகக் கூறி உள்ளார்.

லண்டன்

இங்கிலாந்து மன்னர் சார்லஸ், மறைந்த டயானா தம்பதியரின் இளைய மகன் இளவரசர் ஹாரி (வயது 38), தன்னை விட 3 வயது மூத்த அமெரிக்க நடிகையான மேகன் மார்க்லேயை காதலித்து 2018-ம் ஆண்டு மே 19-ந்தேதி விண்ட்சார் கோட்டையில் உள்ள செயிண்ட் ஜார்ஜ் தேவாலயத்தில் வைத்து மணந்தார்.

இவர்களது திருமணம், அரச குடும்பத்தில் ஒரு பெரும் புயலை கிளப்பியது. ஒரு கட்டத்தில் மனம் நொந்து போன இளவரசர் ஹாரி, மேகன் தம்பதியர் அரச பதவிகளைத் துறந்து, தங்கள் குழந்தைகளான ஆர்ச்சீ மவுண்ட் பேட்டன், லில்லிபெட் மவுண்ட் பேட்டன் ஆகியோருடன் அரண்மனையை விட்டு வெளியேறினர். அவர்கள் அமெரிக்காவில் கலிபோர்னியாவில் குடியேறினர்.

இந்த நிலையில் இளவரசர் ஹாரி, 'ஸ்பேர்' என்ற தலைப்பில் தனது வாழ்க்கை வரலாற்றை புத்தகமாக எழுதி உள்ளார். இந்தப் புத்தகம் 16 மொழிகளில் இன்று வெளியாக உள்ளது.

ஆனால் அதற்கு முன்பாகவே இதில் இடம்பெற்றுள்ள தகவல்கள் வெளியே கசிந்து உலகமெங்கும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

புத்தகத்தில் உள்ள தகவல்கள் இளவரசர் ஹாரி தனது தந்தையை மீண்டும் திருமணம் செய்து கொள்ள வேண்டாம் என்று கெஞ்சினார், ஆப்கானிஸ்தானில் பணியாற்றும் போது 25 தலிபான் போராளிகளை கொன்றார். மேகனுக்கும் கேத்தரினுக்கும் இருந்த கடினமான உறவு குறித்து கூறி உள்ளார்.

புத்தகத்தில் ஒரு முக்கிய கருப்பொருள், அவரது தாயார் இளவரசி டயானாவின் இழப்பு அவருக்கு ஏற்படுத்திய தீர்க்கப்படாத துயரத்தின் உணர்வுமனஉளைச்சல் காயம்" இருப்பதாகக் கூறி உள்ளார்.

மேகன் பிரசவத்தின்போது அவர் கோகோயின், கஞ்சா, மேஜிக் காளான்களை எடுத்துக்கொண்டதாகவும் அவர் கூறி உள்ளார்.

அவர் அந்த புத்தகத்தில் லண்டன் இல்லத்தில் வைத்து 2019-ம் ஆண்டு எங்கள் குடும்பத்தில் ஒரு மோதல் வந்தது. என் மனைவி மேகனை கடினமானவர், முரட்டுத்தனமானவர், கரடுமுரடானவர் என்றெல்லாம் வில்லியம் விமர்சித்தார். ஒரு கட்டத்தில் வில்லியம் எனது சட்டை காலரைப்பிடித்து, என் கழுத்துச்சங்கிலியை இழுத்து, தாக்கி தரையில் தள்ளினார் என கூறி இருந்தார்.

தற்போது மேலும் சில தகவல்கள் வெளியாகி உள்ளது. அதன விவரம் வருமாறு:-

தலிபான்களை தான் மனிதர்களாக பார்க்கவில்லை.அகற்றப்பட வேண்டிய சதுரங்க காய்களாக அவர்களை தான் கருதியதாகவும் ஹாரி தன்னுடைய புத்தகத்தில் எழுதியுள்ளார்.

மேலும் 17 வயதில் தனது கன்னித்தன்மையை வயது முதிர்ந்த பெண்ணிடம் இழந்துவிட்டதாக ஹாரி அதில் வெளிப்படையாகவே எழுதி உள்ளார்.

கொகைன் போதை பொருளை பலமுறை எடுத்துக் கொண்டது உள்ளிட்ட தகவல்களையும் தன்னுடைய சுயசரிதையில் ஹாரி பகிர்ந்து கொண்டுள்ளார்.

அதில் தனக்கு நடந்த சில கிளு கிளுப்பான விவரங்களையும் குறிப்பிட்டு உள்ளார். அதன் விவரம் வருமாறு:-

அன்றைய தினம் எனக்கு 17 வயதுதான் ஆகியிருந்தது. நான் அப்போது விஸ்கி குடித்திருந்தேன். பிறகு ஒரு பப்புக்கு போயிருந்தேன். ஆனால் அங்கே குடிக்கவில்லை.

அங்கு ஒரு பெண் என்னையே உற்று உற்று பார்த்துக்கொண்டு இருந்தார். அவரை நான் அழைத்துக் கொண்டு வெளியே சென்றேன். பப்புக்கு பின்னாடியே ஒரு புல்வெளி இருக்கிறது. அந்த புல்வெளியில் நாங்கள் உடலுறவில் ஈடுபட்டோம்" என்று கூறியுள்ளார்.

இப்போது என்ன ஒரு சிக்கல் என்றால், 18 வயதுக்கு குறைந்த நபர்களோடு உறவு வைத்திருப்பது சட்டப்படி குற்றமாகும்.. அதேபோல, 18 வயதுக்கு குறைந்த நபர்கள் குடிக்கவும் கூடாது. ஆனால், ஹாரி எல்லா வேலைகளையும் 17 வயதிலேயே செய்துள்ளார்.

இதனால், இங்கிலாந்து சட்ட திட்டங்களையும் அவர் மீறியுள்ளதாகவே தெரிகிறது.. ஹாரி இப்படி ஒரு ரகசியத்தை சொன்னதுமே, மீடியாக்கள் பரபரப்பாகிவிட்டன..

ஹாரியுடன் அன்று உறவில் இருந்த பெண்ணின் போட்டோவையும் எப்படியோ மோப்பம் பிடித்து கண்டுபிடித்துவிட்டார்கள். அது இப்போது இணையத்தில் வைரலாகியும் வருகிறது.

ஆனால் அந்தப் பெண், ஹரி தன்னை முத்தமிட்டார், வேறு எதுவும் நடக்கவில்லை என்கிறாராம். இந்த சுயசரிதை வெளியீட்டுக்கு பிறகு, இன்னும் எத்தனை பூதம் கிளம்ப போகிறதோ...?


Next Story