பாலஸ்தீனத்திற்கு அங்கீகாரம் வழங்கும் தருணமிது: ஸ்பெயின் பிரதமர் பேச்சு


பாலஸ்தீனத்திற்கு அங்கீகாரம் வழங்கும் தருணமிது:  ஸ்பெயின் பிரதமர் பேச்சு
x
தினத்தந்தி 25 Nov 2023 3:24 AM GMT (Updated: 25 Nov 2023 3:43 AM GMT)

காசா அழிப்பு மற்றும் ஒரு சமூகம் அழிக்கப்படுகிறது ஆகியவற்றை நாங்கள் ஏற்க முடியாது என்று டி குரூ பேசினார்.

டெல் அவிவ்,

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கு இடையேயான மோதலை முன்னிட்டு, எகிப்தின் ரபா எல்லை பகுதியில், ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் மற்றும் பெல்ஜியத்தின் பிரதமர் அலெக்சாண்டர் டி குரூ ஆகியோர் கூட்டாக நேற்று பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தினர்.

இதில் பேசிய சான்செஸ், சர்வதேச சமூகம் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் என அனைவரும் பாலஸ்தீனத்திற்கு அங்கீகாரம் வழங்குவதற்கான நேரம் வந்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியம், அதுபோன்று இணையவில்லை என்றால், ஸ்பெயின் தனது சொந்த முடிவை எடுக்கும் என்று பேசினார்.

இதனை தொடர்ந்து பெல்ஜியத்தின் பிரதமர் அலெக்சாண்டர் டி குரூ, பாலஸ்தீனத்திற்கு அங்கீகாரம் வழங்குவது பற்றி எதுவும் கூறாதபோதும், அவர் பேசும்போது, வன்முறையை நிறுத்த வேண்டும்.

பணய கைதிகளை விடுவிக்க வேண்டும். உதவி பொருட்கள் காசாவுக்கு சென்று சேர செய்ய வேண்டும். முதலில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதே முன்னுரிமையாக இருக்க வேண்டும் என பேசினார்.

நிரந்தர போர்நிறுத்தம் வேண்டும் என்று வலியுறுத்திய அவர், அதற்கான தேவை மற்றும் நம்பிக்கை உள்ளது என்று கூறினார். பொதுமக்கள் கொல்லப்படுவது நிறுத்தப்பட வேண்டும். நிறைய மக்கள் உயிரிழந்து விட்டனர்.

காசாவை அழிப்பது என்பது ஏற்று கொள்ள முடியாதது. ஒரு சமூகம் அழிக்கப்படுகிறது என்பதனையும் நாங்கள் ஏற்க முடியாது என்று அவர் பேசினார்.


Next Story