20 நாடுகளில் 200 பேருக்கு குரங்கு காய்ச்சல் உலக சுகாதார அமைப்பு தகவல்


20 நாடுகளில் 200 பேருக்கு குரங்கு காய்ச்சல் உலக சுகாதார அமைப்பு தகவல்
x

20 நாடுகளில் 200 பேருக்கு குரங்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது.

20 நாடுகளில் 200 பேருக்கு குரங்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது.லண்டன்,

இங்கிலாந்து, ஸ்பெயின், போர்ச்சுக்கல், கனடா, அமெரிக்கா உள்ளிட்ட 20 நாடுகளில் ஏறத்தாழ 200 பேருக்கு குரங்கு காய்ச்சல் பாதித்துள்ளது என்று உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. இந்த தொற்று பாதிப்பு கட்டுப்படுத்தி விடக்கூடியதுதான் என்றும் தெரிவித்துள்ளது. இந்த குரங்கு காய்ச்சலால் ஓரினச்சேர்க்கையாளர்கள், இரு பாலின சேர்க்கையாளர்கள்தான் அதிகளவில் பாதிக்கப்படுகிறார்கள் என இங்கிலாந்து, ஸ்பெயின், போர்ச்சுக்கல், கனடா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

உலக சுகாதார அமைப்பின் பெருந்தொற்று, தொற்று நோய்கள் பிரிவின் இயக்குனர் சில்வி பிரையண்ட் கூறும்போது, "எதிர்காலத்தில் இந்த குரங்கு காய்ச்சல் இன்னும் அதிக எண்ணிக்கையிலானவர்களை பாதிக்கும் என எதிர்பார்க்கிறோம்" என்று தெரிவித்துள்ளார்.


Next Story