"குரங்கு அம்மை நோய்" சமூக பரவலாக மாறியதா? உலக சுகாதார மையம் விளக்கம்


குரங்கு அம்மை நோய் சமூக பரவலாக மாறியதா? உலக சுகாதார மையம் விளக்கம்
x
தினத்தந்தி 26 Jun 2022 4:26 AM GMT (Updated: 26 Jun 2022 4:27 AM GMT)

குரங்கு அம்மை நோய் உலக சுகாதார அவசரநிலையை அடையவில்லை என உலக சுகாதார மையம் தொிவித்து உள்ளது.

ஜெனீவா,

உலகம் முழுவதும் குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போகிறது. இதுவரை 58 நாடுகளில் இந்த நோய் தாக்கியுள்ளது. உலகளவில், 3,417க்கும் மேற்பட்டோர் குரங்கு அம்மை பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர்.

இது தொடா்பாக உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் வெளியிட்ட அறிக்கையில், குரங்கு அம்மை நோய் 50-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. சுமாா் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டவா்கள் பாதிக்கப்பட்டுள்ளது கவலையளிக்கிறது.

குரங்கு அம்மை நோய் பாதித்தவா்களை கண்காணித்தல், அவர்களை தனிமைப்படுத்துதல் ஆகிய நடவடிக்கை மூலம் குரங்கு அம்மை பரவுவதை தடுப்பதற்கும், பாதிக்கப்பட்டவா்களுக்கு சிகிச்சைகள் மற்றும் தடுப்பூசி ஆகியவை கிடைப்பதை உறுதிப்படுத்த ஒருங்கிணைந்த நடவடிக்கை தேவைப்படுகிறது.

குரங்கு அம்மை நோய் பல நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பரவும் அபாயம் உள்ளது.

மேலும்,குரங்கு அம்மை நோய் உலக சுகாதார அவசரநிலையை அடையவில்லை. ஆனால் வளா்ந்து வரும் சுகாதார அச்சுறுத்தலாக உள்ளது என தொிவித்து உள்ளாா்.

குரங்கு அம்மை நோய் தொடா்பான அவசர ஆலோசனையில் பங்கேற்ற விஞ்ஞானிகள் மற்றும் பொது சுகாதார நிபுணர்களுக்கு நன்றி தொிவித்தாா். தொடா்ந்து விழிப்புடன் இருப்பதற்கு அவா்களின் ஆலோசனையை பின்பற்றுவோம் என அவா் தொிவித்து உள்ளாா்.


Next Story