கொரோனாவை வென்று விட்டோம்: வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் பெருமிதம்


கொரோனாவை வென்று விட்டோம்:  வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் பெருமிதம்
x

வடகொரியாவில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதை ஒரு போதும் கிம் ஜாங் அன் வெளிப்படையாக அறிவித்தது இல்லை.

சியோல்,

மர்ம தேசமாக அறியப்படும் வடகொரியாவில் என்ன நடக்கிறது என்பது அந்த நாட்டினருக்கே வெளிச்சம். அந்த அளவுக்கு மிகவும் ரகசியம் காக்கும் நாடாக உள்ள வடகொரியாவில் கொரோனா பரவல் கடும் பாதிப்பை ஏற்படுத்தியதாக அவ்வப்போது செய்திகள் வெளியாகி வந்தன. இதன் காரணமாக அங்கு கடுமையான உணவுப் பஞ்சம் ஏற்பட்டது. கடந்த மே மாதம் முதல் வட கொரியாவில் 48 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது என்று சொல்லப்படுகிறது. எனினும், வடகொரியா இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

இந்த நிலையில், கொரோனா வைரஸ் பரவல் கடந்த 2 வாரங்களாக இன்று தெரிவித்துள்ள வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன், கொரோனாவை வென்று விட்டதாக மகிழ்ச்சி அடைந்துள்ளார். இது குறித்து கிம் ஜாங் அன் கூறுகையில், "நம் மக்களுக்குக் கிடைத்துள்ள இந்த வெற்றி வரலாற்று சிறப்புமிக்கது. மீண்டும் ஒருமுறை நாம் இந்த உலகிற்கு நமது சிறப்பை உணர்த்தியுள்ளோம். நம் மக்களின் அசைக்கமுடியாது உறுதிக்கு எடுத்துக்காட்டு" என்று கூறியுள்ளார்.


Next Story