பைசர் நிறுவன தலைமை செயல் அதிகாரிக்கு 2-வது முறையாக கொரோனா பாதிப்பு


பைசர் நிறுவன தலைமை செயல் அதிகாரிக்கு 2-வது முறையாக கொரோனா பாதிப்பு
x

பைசர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான ஆல்பெர்ட் போர்லாவுக்கு 2-வது முறையாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.



நியூயார்க்,


பைசர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான ஆல்பெர்ட் போர்லா (வயது 60) 2-வது முறையாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளார்.

போர்லாவுக்கு கடந்த ஆகஸ்டில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து அவரது நிறுவனத்தின் கொரோனா சிகிச்சைக்கான பேக்ஸ்லோவிட் என்ற தடுப்பு மருந்தினை அவர் எடுத்து கொண்டார்.

இந்நிலையில், அவருக்கு 2-வது முறையாக கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நான் நன்றாகவே உள்ளேன். கொரோனா பாதிப்புக்கான அறிகுறிகள் எதுவும் இன்றி காணப்படுகிறேன் என்று தெரிவித்து உள்ளார்.

வயது முதிர்ந்த நோயாளிகள் போன்ற, அதிக ஆபத்தில் உள்ள நபர்களுக்கு பேக்ஸ்லோவிட் தடுப்பு மருந்து சிகிச்சை அளிக்கப்படுவது வழக்கம்.

பைசர் மற்றும் அதன் ஜெர்மன் நாட்டு பங்குதாரரான பையோஎன்டெக் நிறுவனத்தின் உற்பத்தியான கொரோனா தடுப்பு மருந்தின் 4 டோஸ்கள் போர்லாவுக்கு அளிக்கப்பட்டு உள்ளன.

எனினும், புதிய வகை ஈரிணை திறம் வாய்ந்த பூஸ்டர் தடுப்பூசியை இன்னும் எடுத்து கொள்ளவில்லை என போர்லா கூறியுள்ளார்.

அந்த தடுப்பூசி, ஒமைக்ரானின் பிஏ.5 மற்றும் பிஏ.4 ஆகிய இரு வகைகளையும் முறையே 84.8% மற்றும் 1.8% என்ற அளவில் எதிர்கொள்ளும் ஆற்றல் வாய்ந்தது. இந்த வகை கொரோனாவே அமெரிக்கா முழுவதும் பரவி வருகிறது என சமீபத்திய தரவுகள் தெரிவிக்கின்றன.


Next Story