பிரபாகரன் மே 15 வரை களத்தில் இருந்தார்...! ஆனால் உயிரோடு இல்லை - குழப்பும் முன்னாள் போராளிகள்


பிரபாகரன் மே 15 வரை களத்தில் இருந்தார்...! ஆனால் உயிரோடு இல்லை - குழப்பும் முன்னாள் போராளிகள்
x

2009 ஆம் ஆண்டு மே மாதம் 15 ஆம் தேதி வரை களத்தில் போராடினார். இருப்பினும் உயிரோடு இல்லை. என விடுதலைப்புலிகள் இயக்கத்தின் முன்னாள் போராளிகள் கருத்துகள் வெளியிட்டுள்ளனர்.

கொழும்பு

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் உயிருடன் உள்ளார் என்று பழ.நெடுமாறன் நேற்று தெரிவித்தார். அவரது இந்த கருத்துக்கு இலங்கை ராணுவம் உடனடியாக மறுப்பு தெரிவித்தது.

பழ.நெடுமாறனின் இந்த அறிவிப்பு தற்போது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அரசியல்வாதிகள், முன்னாள் போராளிகள், அரசியல் ஆய்வாளர்கள் என இதுகுறித்து மாறுபட்ட கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.

இலங்கையில் 2009 ஆம் ஆண்டு மே மாதம் இறுதி யுத்தத்தின் போது விடுதலைப்புலிகள் தலைவர் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

யுத்தத்தில் சார்லஸ், பாலச்சந்திரன் உள்ளிட்டோரை பலி கொடுத்துவிட்டு அவர் மட்டும் தப்பிச்சென்றிருப்பாரா என விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் கேள்விகளை எழுப்பியுள்ளனர்.

மேலும், திடீரென பழ.நெடுமாறன் இந்த அறிவிப்பை வெளியிடக்காரணம் என்ன என்பது குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுகின்றன.

இருப்பினும், பிரபாகரனின் பாதுகாவலர்களாக இருந்த சில போராளிகள் ஊடகங்களில் பல தகவல்களை வெளியிட்டு வருகின்றனர்.

2009 ஆம் ஆண்டு மே 15 ஆம் தேதி வரை பிரபாகரன் போர்க்களத்தில் இருந்தார் கடைசியாக நந்திக்கடல் பகுதிக்கு சென்ற நிலையில் இருபக்கம் நிலப்பரப்பு மற்றொரு பக்கம் நந்திக் கடல். இன்னொரு பக்கம் கடற்பரப்பு. அதன் பின்னர் அவருக்கு என்ன நடந்தது என தெரியாது.

பிரபாகரன் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை. ஆனாலும் இலங்கை இராணுவம் காட்டியது பிரபாகரனுடைய உடல் அல்ல என்றும் தெரிவித்துள்ளனர்.

அதேவேளை, 2009 ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தின் இறுதி நாட்களில் பிரபாகரன், பாதுகாவலர்கள் உட்பட யாருடனும் தொடர்பில் இல்லை]. அதன் காரணமாக அவருக்கு என்ன நடந்தது என்பது யாருக்குமே தெரியாது எனவும், அவர் உயிருடன் இருந்து அவரே இதனை அறிவிக்கும் வரை உண்மை வெளீவரப்போவது என நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


Next Story