இங்கிலாந்து பிரதமராக ரிஷி சுனக் தேர்வானது எல்லை தாண்டிய மைல்கல் - அமெரிக்க அதிபர் ஜோ பைடன் புகழாரம்


இங்கிலாந்து பிரதமராக ரிஷி சுனக் தேர்வானது எல்லை தாண்டிய மைல்கல் - அமெரிக்க அதிபர் ஜோ பைடன் புகழாரம்
x

இங்கிலாந்து அதிபராக ரிஷி சுனக் தேர்வானது எல்லை தாண்டிய மைல்கல் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் புகழ்ந்துள்ளார்.

வாஷிங்டன்,

இங்கிலாந்தின் 57-வது பிரதமராக கன்சர்வேட்டிவ் கட்சியை சேர்ந்த இந்திய வம்சாவளியான ரிஷி சுனக் மூன்றாம் சார்லஸ் அரசரால் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ரிஷி சுனக்கிற்கு உலக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இங்கிலாந்து நாட்டின் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட ரிஷி சுனக், அரசர் மூன்றாம் சார்லசை இன்று சந்தித்து பேசினார். அப்போது, அரசர் 3-ம் சார்லஸ், முறைப்படி புதிய பிரதமராக சுனக்கை அறிவித்தார்.

இந்த நிலையில், பிரிட்டன் அதிபர் ரிஷி சுனக்கிற்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து வெள்ளை மாளிகையில் அதிபர் ஜோ பைடன் பேசியதாவது:-

பிரிட்டன் பிரதமராக ரிஷி சுனக் தேர்வாகி இருப்பது நம்ப முடியாத மைல்ல என கூறியுள்ளார். அமெரிக்காவை சேர்ந்த இந்திய வம்சாவளி உறுப்பினர்கள் உட்பட 200 பேரால் பிரிட்டன் பிரதமராக ரிஷி சுனக் தேர்வாகி இருப்பதாக குறிப்பிட்ட பைடன், எல்லைகளை தகர்த்தெறிந்து அவர் சாதித்திருப்பதாக புகழாரம் சூட்டினார்.


Next Story