ரஷியாவின் லுனா 25 விண்கலம் விழுந்ததால் நிலவில் ஏற்பட்ட பள்ளம்? நாசா வெளியிட்ட தகவல்


ரஷியாவின் லுனா 25 விண்கலம் விழுந்ததால் நிலவில்  ஏற்பட்ட பள்ளம்? நாசா வெளியிட்ட தகவல்
x

ரஷியாவின் லுனா 25 விண்கலம் விழுந்ததால் நிலவின் மேற்பரப்பில் 10 மீட்டர் விட்டத்திற்கு பள்ளம் ஏற்பட்டு இருக்க வாய்ப்பு உள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.

வாஷிங்டன்,

நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்கு இஸ்ரோ, சந்திரயான் 3 விண்கலத்தை அனுப்பியது. தென் துருவத்தில் வேறு எந்த நாடும் கால் பதிக்காத நிலையில், இந்தியாதான் முதன் முதலாக இந்த வரலாற்று சாதனையை நிகழ்த்தியது. முன்னதாக இந்தியாவுக்கு போட்டியாக ரஷியா, லுனா 25 என்ற விண்கலத்தை விண்ணில் ஏவியது. 47 ஆண்டுகளுக்கு பிறகு ரஷியா அனுப்பிய இந்த விண்கலம் தோல்வியில் விழுந்தது.

நிலவின் சுற்று வட்டப்பாதைக்குள் சென்ற போதும் கடைசி கட்டத்தில் தரையிறங்க முடியாமல் நிலவில் விழுந்தது. ஆகஸ்ட் 19 ஆம் தேதி இந்த திட்டம் தோல்வியில் முடிந்து விட்டது என ரஷியா அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்த நிலையில், நிலவின் மேற்பரப்பில் புதிய பள்ளம் ஒன்று ஏற்பட்டுள்ளதை நாசவின் எல்.ஆர்.ஓ ஆர்பிட்டர் கண்டறிந்துள்ளது. இந்த பள்ளம் ரஷியாவின் லுனா 25 விண்கலத்தினால் ஏற்பட்ட பள்ளமாக இருக்க வாய்ப்புள்ளதாக நாசா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story