காபூல் குருத்வாரா தாக்குதல் எதிரொலி: ஆப்கானிஸ்தான் வாழ் சீக்கியர்கள் மற்றும் இந்துக்களுக்கு இ-விசா


காபூல் குருத்வாரா தாக்குதல் எதிரொலி: ஆப்கானிஸ்தான் வாழ் சீக்கியர்கள் மற்றும் இந்துக்களுக்கு இ-விசா
x

பயங்கரவாத தாக்குதலை அடுத்து, ஆப்கானிஸ்தான் வாழ் சீக்கியர்கள் மற்றும் இந்துக்களுக்கு இ-விசாக்களை வழங்க உள்ளது.

காபூல்,

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் சீக்கிய குருத்வாரா உள்ளது. இங்கு நேற்று காலை 30 பேர் வழிபாடு நடத்திக் கொண்டிருந்தனர். அப்போது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 2 பேர் பலியானதாகவும் 7 பேர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பயங்கரவாதத் தாக்குதலை அடுத்து, ஆப்கானிஸ்தான் வாழ் சீக்கியர்கள் மற்றும் இந்துக்களுக்கு கிட்டத்தட்ட 100 இ-விசாக்களை வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, முன்னுரிமை அடிப்படையில் 100 இ-விசாக்கள் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.


Next Story