ரஷிய-உக்ரைன் எல்லையில் எரிவாயு குழாய் வெடிப்பு: 3 பேர் உயிரிழப்பு


ரஷிய-உக்ரைன் எல்லையில் எரிவாயு குழாய் வெடிப்பு: 3 பேர் உயிரிழப்பு
x

ரஷிய-உக்ரைன் எல்லையில் எரிவாயு குழாயில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக 3 பேர் உயிரிழந்தனர்.

மாஸ்கோ,

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து வரும் விவகாரத்தில் பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள் ரஷியாவுக்கு எதிராக நிற்கின்றன. இதனால் ஐரோப்பிய நாடுகளுக்கான எரிவாயு ஏற்றுமதியை ரஷியா குறைத்துள்ளது. இருப்பினும் எரிவாயு ஏற்றுமதி நிறுத்தப்படவில்லை. போருக்கு மத்தியிலும் ரஷியாவில் இருந்து குழாய் மூலமாக ஐரோப்பிய நாடுகளுக்கு எரிவாயு அனுப்பப்பட்டு வருகிறது.

அந்த வகையில் 1980-களில் கட்டப்பட்ட குழாய், உக்ரைனின் எல்லையையொட்டி அமைந்துள்ள ரஷியாவின் சுட்ஜா நகர் வழியாக ஐரோப்பிய நாடுகளுக்கு எரிவாயு கொண்டு செல்கிறது. இந்த எரிவாயு குழாய் உக்ரைனுக்குள் நுழைந்து செல்கிறது.

இந்த நிலையில் நேற்று முதினம் ரஷியாவின் சுவாஷியா பிராந்தியத்தில் இருக்கும் எரிவாயு குழாயில் பழுது பார்க்கும் பணிகள் நடைபெற்று கொண்டிருந்தன. அப்போது சற்றும் எதிர்பாராத விதமாக எரிவாயு குழாயில் கசிவு ஏற்பட்டடு, பயங்கர வெடிப்பு நேரிட்டது.

இதில் வானுயரத்துக்கு தீ எழுந்தது. இந்த விபத்தில் எரிவாயு குழாயை பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் 3 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியாகினர். மேலும் ஒருவர் படுகாயம் அடைந்தார். இந்த விபத்தால் ஐரோப்பிய நாடுகளுக்கான எரிவாயு ஏற்றுமதி இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story