அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மனைவிக்கு மீண்டும் கொரோனா பாதிப்பு!


அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மனைவிக்கு மீண்டும் கொரோனா பாதிப்பு!
x

அமெரிக்க அதிபரின் மனைவி ஜில் பைடனுக்கு கொரோனா பாதிப்பு மீண்டும் உறுதியானது.

வாஷிங்டன்,

அமெரிக்காவின் முதல் பெண்மணி என்றழைக்கப்படும் அமெரிக்க அதிபரின் மனைவி ஜில் பைடனுக்கு கொரோனா பாதிப்பு மீண்டும் உறுதியானது.

இதனையடுத்து அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு புதன்கிழமை கொரோனா சோதனை நடத்தப்பட்டது. ஆனால் அவருக்கு கொரோனா பாதிப்பு இல்லை.

இதனையடுத்து ஜில் பைடன் டெலாவேரில் உள்ள இல்லத்தில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. அவருக்கு அறிகுறிகள் ஏதுமில்லை என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

எனினும், ஜில் பைடனை சந்தித்து இருந்ததால், அதிபர் ஜோ பைடனும் அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான மையங்களின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி 10 நாட்களுக்கு வீட்டிற்குள் தனிமைப்படுத்திக் கொள்வார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.


Next Story