ராணி எலிசபெத்தின் இறுதிச்சடங்கு: லண்டன் சென்றடைந்தார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்!


ராணி எலிசபெத்தின் இறுதிச்சடங்கு: லண்டன் சென்றடைந்தார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்!
x

இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் லண்டன் சென்றடைந்தார்.

லண்டன்,

இங்கிலாந்து நாட்டின் ராணி 2-ம் எலிசபெத் கடந்த 8-ம் தேதி உயிரிழந்தார். அவர் தனது 96-வது வயதில் ஸ்காட்லாந்தில் உள்ள பால்மோரல் பண்ணை மாளிகையில் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

ராணி எலிசபெத்தின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக உலகத் தலைவர்கள் இங்கிலாந்திற்கு படையெடுத்துள்ளனர். லண்டனில் வெஸ்ட் மின்ஸ்டர் மண்டபத்தில் மேடையில் ராணியின் உடல், ராஜ மரியாதையுடன், கிரீடத்துடன் வைக்கப்பட்டுள்ளது. வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் கடந்த ஆண்டு மறைந்த ராணியின் கணவர் அரசர் பிலிப் அடக்கம் செய்யப்பட்ட இடம் அருகே, நாளை ராணியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.

இந்த நிலையில், இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் இறுதி சடங்கில் பங்கேற்பதற்காக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் லண்டன் சென்றடைந்தார்.

ராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச் சடங்கிற்கு முன்னதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சனிக்கிழமை இரவில் பிரிட்டன் சென்றடைந்தார். அவரது விமானம் இரவு 10:00 மணியளவில் லண்டன் அருகே உள்ள ஸ்டான்ஸ்டெட் விமான நிலையத்தை சென்றடைந்தது.

அவர் ராணி எலிசபெத்தின் உடல் இருக்கும் சவப்பெட்டியில் மரியாதை செலுத்துவார் என்றும் புதிய மன்னர் மூன்றாம் சார்லஸை சந்திப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.எனினும், இங்கிலாந்து புதிய பிரதமர் லிஸ் டிரஸ் உடனான பைடனின் திட்டமிடப்பட்ட சந்திப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது.


Next Story