புற்றுநோய் சிகிச்சையில் அடுத்த முன்னேற்றம் தடுப்பூசியாக இருக்கும் அமெரிக்க விஞ்ஞானிகள் தகவல்


புற்றுநோய் சிகிச்சையில் அடுத்த முன்னேற்றம் தடுப்பூசியாக இருக்கும் அமெரிக்க விஞ்ஞானிகள் தகவல்
x
தினத்தந்தி 27 Jun 2023 3:05 AM GMT (Updated: 27 Jun 2023 3:41 AM GMT)

அடுத்த 5 ஆண்டுகளில் புற்றுநோய் சிகிச்சைக்கான தடுப்பூசிகள் வெளிவரலாம்.

சியாட்டில்,

அமெரிக்காவின் சியாட்டில் நகரை தலைமையிடமாக கொண்டு இயங்கும் தேசிய புற்றுநோய் மையம், புற்றுநோய்க்கு தடுப்பூசிகள் உட்பட பிற நோய் எதிர்ப்பு சிகிச்சைகளை உருவாக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறது.

இந்த நிலையில் தடுப்பூசிக்கான ஆராய்ச்சி மிகப்பெரிய திருப்புமுனையை எட்டியுள்ளதாக அதுதொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டு வரும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து சியாட்டில் தேசிய புற்றுநோய் மையத்தின் மூத்த விஞ்ஞானியான டாக்டர் ஜேம்ஸ் குல்லி கூறுகையில், "புற்றுநோய் சிகிச்சையில் அடுத்த பெரிய முன்னேற்றம் தடுப்பூசியாக இருக்கும். பல ஆண்டுகளாக வரையறுக்கப்பட்ட வெற்றிக்கு பிறகு, தடுப்பூசி சிகிச்சையை உருவாக்கும் ஆராய்ச்சியில் மிகப்பெரிய திருப்புமுனையை எட்டியுள்ளோம். அடுத்த 5 ஆண்டுகளில் புற்றுநோய் சிகிச்சைக்கான தடுப்பூசிகள் வெளிவரலாம். இவை நோயைத் தடுக்கும் பாரம்பரிய தடுப்பூசிகள் அல்ல. மாறாக புற்றுநோய் கட்டிகளை சுருக்கவும், புற்றுநோய் மீண்டும் வராமல் தடுக்கவும் உதவும் தடுப்பூசிகளாக இருக்கும்" என்றார்.


Next Story