திருச்செந்தூர் தீர்த்தங்கள்


திருச்செந்தூர் தீர்த்தங்கள்
x
தினத்தந்தி 18 Sep 2018 7:57 AM GMT (Updated: 18 Sep 2018 7:57 AM GMT)

காயத்ரி மந்திரத்தின் 24 எழுத்துக்களும், திருச்செந்தூர் தலத்தில் தீர்த்தமாக உள்ளதாகக் கூறப்படுகிறது. இவற்றில், ‘கந்த புஷ்கரணி’ எனப்படும் நாழிக்கிணற்றில் மட்டுமே பக்தர்கள் நீராடி வருகிறார்கள்.

டற்கரையில் அமைந்திருந்த சில தீர்த்த கிணறுகள் மணல் மூடி தூர்ந்து விட்டன. புராண காலங்களில் திருச் செந்தூரில் இருந்ததாக சொல்லப்படும் 24 தீர்த்தங்களை இங்கே பார்க்கலாம்.

முகாரம்ப தீர்த்தம்: இதில் நீராடி இறைவனை வழிபட்டால், கந்தக் கடவுளின் கருணையைப் பெறலாம்.

தெய்வானை தீர்த்தம்: இந்தத் தீர்த்தத்தில் நீராடினால், ஆடை அணிகலன், போஜனம், தாம்பூலம், பரிமளம், பட்டு, பூ அமளி என்கின்ற இன்பத்தைப் பெறுவர்.

வள்ளி தீர்த்தம்: இந்தத் தீர்த்தம் மன அமைதியையும், பிரணவ சொரூபமாய் பிரகாசிக் கின்ற கந்தப்பெரு மானின் திருவடியைத் தியானிக்கும் ஞானத்தையும் கொடுக்கும்.

லட்சுமி தீர்த்தம்: இந்தத் தீர்த்தத்தில் நீராடி வழிபட்டால், குபேரனைப் போன்ற செல்வங்களைப் பெறுவர்.

சித்தர் தீர்த்தம்: இந்த தீர்த்த நீராடல் காமம், வெகுளி, மயக்கம் என்னும் மூன்று குற்றங்களையும் நீக்கக் கூடியது. பகையை விலக்கி, முக்தியை நாடச் செய்யும்.

திக்கு பாலகர் தீர்த்தம்: கங்கை, யமுனை, காவிரி முதலிய தீர்த்தங்கள் கொடுக்கும் பலனை இந்தத் தீர்த்தம் கொடுக்கும்.

காயத்ரி தீர்த்தம்: அதிகமான வேள்விகளைச் செய்தவருக்கு கிடைக்கின்ற பலன்களைக் கொடுக்கும் தீர்த்தம் இது.

சாவித்ரி தீர்த்தம்: பிரம்மாதி தேவர்களாலும் காண்பதற்கு அரிய உமாதேவியின் பொன்னடி களைப் பூஜித்த பலனைப் கொடுக்கும்.

சரஸ்வதி தீர்த்தம்: சகல ஆகம புராணங்களையும் அறியத் தகுந்த அறிவைக் கொடுக்கும்.

அயிராவத தீர்த்தம்:
சந்திர பதாகை முதலிய நதிகளில் நீராடிய பலனைப் பெறலாம்.

வயிரவ தீர்த்தம்: இந்தத் தீர்த்தத்தில் நீராடியோர் பல புண்ணிய நதிகளில் நீராடி அடையும் பலனை அடைவர்.

துர்க்கை தீர்த்தம்: சகல துன்பங்களும் நீங்கி நன்மை கிட்டும்.

ஞான தீர்த்தம்: இறைவனை நினைத்தவர்களுக்கு வேண்டியதை நிறைவேற்றித் தரும் தீர்த்தம் இது.

சத்திய தீர்த்தம்: களவு, கள் உண்ணுல், குரு நிந்தை, அகங்காரம், காமம், பகை, சோம்பல், பாதகம், அதிபாதகம், மகா பாதகம் ஆகியவற்றை நீக்கி, நன்னெறியில் நிற்கச் செய்யும்.

தரும தீர்த்தம்: தேவாமிர்தம் போன்ற இன்பமான வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கும்.

முனிவர் தீர்த்தம்: இந்த தீர்த்தத்தில் நீராடுவோர், ஜகத்ரட்சகனை நேரில் கண்ட பலனைப் பெறுவார்கள்.

தேவர் தீர்த்தம்: காமம், குரோதம், லோபம், மோகம் போன்ற ஆறு குற்றங்களை நீக்கி, ஞான அமுதத்தை நல்கும்.

பாவநாச தீர்த்தம்: சாபங்களை விலக்கி அனைத்துப் புண்ணியங்கையும் அளிக்கவல்லது.

கந்தபுஷ்கரணி தீர்த்தம்: சந்திரசேகர சடாதரனான சிவபெருமானின் திருவடியை அடையும் பாக்கியத்தைப் பெறுவார்கள்.

கங்கா தீர்த்தம்: இத்தீர்த்தம் முக்திக்கு ஏதுவாய் பிறவிக் கடலைக் கடக்கச் செய்யும் தெப்பமாக மாறும்.

சேது தீர்த்தம்: சகல பாதகத்தில் இருந்தும் விடுவித்து, நன்மையை அளித்தருளும்.

கந்தமாதன தீர்த்தம்: இந்தத் தீர்த்தமானது, பாவங்களைப் போக்கி பரிசுத்தத்தைத் தர வல்லது.

மாதுரு தீர்த்தம்: இந்தத் தீர்த்தத்தில் நீராடினால், அன்னையைப் போன்று ஆசீர்வதித்து, அதிலும் பன்மடங்கு அதிகமாக பலனைக் கொடுக்கும்.

தென்புலத்தார் தீர்த்தம்: இதில் ஒரு தரம் மூழ்கி எள்ளும் தண்ணீரும் இறைத்தவர்க ளுக்கு, இம்மை மறுமையும் சிறந்து விளங்க செந்தி லாண்டவன் அருள்புரிவான்.

Next Story