கோபி ஈஸ்வரன் கோவிலில் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது


கோபி ஈஸ்வரன் கோவிலில்  சொக்கப்பனை கொளுத்தப்பட்டது
x

கோபி ஈஸ்வரன் கோவிலில் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது.

ஈரோடு

கோபி

கோபி ஈஸ்வரன் கோவிலின் எதிரில் கார்த்திகை தீபத்தை முன்னிட்டு சொக்கப்பனை கொளுத்தப்பட்டு திருக்கோடி ஏற்றப்பட்டது. இதையொட்டி கோவிலின் உள்ளே விசாலாட்சி சமேத விஸ்வேஸ்வரருக்கு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

முன்னதாக கோவிலில் உள் பிரகாரத்தில் உள்ள சூரியன், தட்சிணாமூர்த்தி, விநாயகர், சோமசுந்தரம், நவக்கிரகம், சனீஸ்வரர், கால பைரவர் ஆகிய தெய்வங்களுக்கு தீபம் காண்பிக்கப்பட்டது. பின்னர் கோவிலின் வெளிப்புறத்தில் உள்ள சொக்கப்பனை கொளுத்தப்பட்டு திருக் கோடி ஏற்றப்பட்டது. அதன்பின்னர் விசாலாட்சி சமேத விஸ்வேஸ்வர சோமாஸ்கந்தர் ஆகிய தெய்வங்கள் உற்சவம் அக்ரகாரத்தில் நடந்தது.

1 More update

Related Tags :
Next Story