அன்ன தோஷம் போக்கும் அன்னபூரணி வழிபாடு


அன்ன தோஷம் போக்கும் அன்னபூரணி வழிபாடு
x

‘அன்ன தோஷம்’ என்பது ஒரு வகையான தோஷமாகும். ‘பசி’ என்று கேட்கும் ஒருவருக்கு, உணவளிக்காமல் விரட்டியவர்களை இந்த தோஷம் பிடிக்கும்.

குறிப்பாக கர்ப்பிணிப் பெண்கள் பசி என்று கேட்கும் பொழுது அவர்களுக்கு உணவளிக்காமல் இருப்பவர்கள், உணவு உட்கொள்ள அமர்ந்தவர்களை சாப்பிடவிடாமல் விரட்டியடிப்பவர்கள், கைவசம் உணவு இருந்தும் அதை யாருக்கும் பகிர்ந்து அளிக்காமல் குப்பையில் வீசுபவர்கள், ஒழுங்காகப் பிண்டம் கொடுக்காதவர்கள், சிறு குழந்தைகளை பார்க்க வைத்து தான் மட்டும் சாப்பிடுபவர்கள் ஆகியோரை இந்த அன்ன தோஷம் பாதிக்கும். இந்த தோஷம் உள்ளவர்களின் வீட்டில், எவ்வளவு உழைத்தாலும் செல்வம் நிலைக்காது. அவர்கள் வெள்ளிதோறும் விரதமிருந்து அன்னபூரணியை வழிபட்டு வருவதுடன், இயன்றவரை அன்னதானங்களும் செய்தால் இல்லத்தில் செல்வ வளம் பெருகும். மனக்குறை அகலும்.


Next Story