பங்குனி உத்திரம்; கோலாகலமாக நடைபெற்ற குன்றக்குடி சண்முகநாதபெருமான் கோவில் தேரோட்டம்


பங்குனி உத்திரம்; கோலாகலமாக நடைபெற்ற குன்றக்குடி சண்முகநாதபெருமான் கோவில் தேரோட்டம்
x

பங்குனி உத்திரத்தை முன்னிட்டு குன்றக்குடி சண்முகநாதபெருமான் கோவிலில் தேரோட்டம் நடைபெற்றது.

குன்றக்குடி ,

காரைக்குடி அருகே உள்ள குன்றக்குடியில் சண்முகநாதபெருமான் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருவிழா 10 நாட்கள் சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

இந்த ஆண்டு விழா கடந்த 14-ந்தேதி மாலை அனுக்கை, விக்னேஸ்வரர் பூஜையுடன் தொடங்கியது. மறுநாள் 15-ந்தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது.

விழாவையொட்டி தினந்தோறும் இரவு வெள்ளிக்கேடகத்தில் வள்ளி, தெய்வானையுடன் சண்முகநாதபெருமான் எழுந்தருளி வீதி உலா வந்தார். கடந்த 21-ந்தேதி இரவு தங்க ரதத்திலும், 22-ந்தேதி இரவு தெப்பம் மற்றும் வெள்ளி ரதத்தில் சுவாமி வீதி உலா வந்தார்.

இன்று 9-ம் நாள் திருவிழாவையொட்டி காலை 5.30மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தேரில் சுவாமி வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளினார். தொடர்ந்து தேரில் எழுந்தருளிய சுவாமிக்கு பக்தர்கள் அர்ச்சனை செய்து வழிபாடு செய்தனர்.

அதன் பின்னர் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் தலைமையில் ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து தேரோட்டம் நடைபெற்றது. தேர் கோவிலில் இருந்து புறப்பட்டு கோவிலை சுற்றி 4 ரத வீதிகள் வழியாக வந்து நிலையை வந்தடைந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் தலைமையில் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.


Next Story