ருத்ரகோடீஸ்வரர் கோவில் பிரதோஷ வழிபாடு


ருத்ரகோடீஸ்வரர் கோவில் பிரதோஷ வழிபாடு
x

வேளுக்குடி ருத்ரகோடீஸ்வரர் கோவில் பிரதோஷ வழிபாடு நடந்தது

திருவாரூர்

கூத்தாநல்லூர்;

கூத்தாநல்லூர் அருகே உள்ள வேளுக்குடியில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான ருத்ரகோடீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று பிரதோஷ வழிபாடு நடைப்பெற்றது. இதில், சிவபெருமான் மற்றும் நந்தி பகவானுக்கு 108 லிட்டர் பால் மற்றும் தயிர், சந்தனம், தேன், பன்னீர், இளநீர், பஞ்சாமிர்தம், மஞ்சள் பொடி ஆகியவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் சாமி வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story