மேல்கோட்டை வைரமுடி உற்சவம்


மேல்கோட்டை வைரமுடி உற்சவம்
x

நாராயணா கோவிலில் விஷ்ணுவுடன் ராமானுஜருக்கும் வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் வைர முடி உற்சவம் வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது.

அழகிய மலை நகரம் தான் மேல்கோட்டை. இங்கு கோவில்கள், மடங்கள், சமஸ்கிருத ஆராய்ச்சி மையம் உள்ளிட்டவை காணப்படுகின்றன. அதில் 12-ம் நூற்றாண்டை சேர்ந்த செலுவராய சாமி கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த கோவிலில் காணாமல் போன சிலையை வைணவ பக்தர் ராமானுஜர் கண்டுபிடித்து, மீண்டும் அதை கோவிலுக்கு கொண்டு வந்து நிறுவியதாக புராதன வரலாறு சொல்லப்படுகிறது. இதனால் அங்குள்ள நாராயணா கோவிலில் விஷ்ணுவுடன் ராமானுஜருக்கும் வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது.

இங்கு ஆண்டுதோறும் வைர முடி உற்சவம் வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது. அப்போது, மைசூரு மன்னர் கோவிலுக்கு வழங்கிய வைர கற்கள் பதிக்கப்பட்ட கிரீடம் சாமிக்கு அணிவிக்கப்பட்டு நகரில் ஊர்வலமாக கொண்டு வரப்படும். இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். இதேபோல், மேல்கோட்டையில் மலை மீது பிரசித்தி பெற்ற யோக நரசிம்மசாமி கோவில் உள்ளது. மண்டியா மாவட்டம் பாண்டவபுரா தாலுகாவில் அமைந்து உள்ள மேல்கோட்டை, பெங்களூருவில் இருந்து 133 கிலோ மீட்டர் தொலைவிலும், மைசூருவில் இருந்து 50 கிலோ மீட்டர் தூரத்திலும் அமைந்து உள்ளது.

1 More update

Next Story