87 அணிகள் பங்கேற்கும் மாநில கூடைப்பந்து போட்டி சென்னையில் இன்று தொடக்கம்


87 அணிகள் பங்கேற்கும் மாநில கூடைப்பந்து போட்டி சென்னையில் இன்று தொடக்கம்
x
தினத்தந்தி 26 April 2019 8:45 PM GMT (Updated: 26 April 2019 8:07 PM GMT)

ரைசிங் ஸ்டார் கூடைப்பந்து கிளப் சார்பில், சங்கம் சினிமாஸ் ஆதரவுடன் 25-வது மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி சென்னையில் இன்று (சனிக்கிழமை) முதல் மே 5-ந் தேதி வரை நடக்கிறது.

சென்னை,

ரைசிங் ஸ்டார் கூடைப்பந்து கிளப் சார்பில், சங்கம் சினிமாஸ் ஆதரவுடன் 25-வது மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி சென்னையில் இன்று (சனிக்கிழமை) முதல் மே 5-ந் தேதி வரை நடக்கிறது. தியாகராயநகர் வெங்கட்நாராயணா ரோட்டில் உள்ள மாநகராட்சி திடல் மற்றும் பெரியமேட்டில் உள்ள நேரு ஸ்டேடியத்தில் நடைபெறும் இந்த போட்டியில் ஆண்கள் பிரிவில் வருமான வரி, இந்தியன் வங்கி, ஐ.சி.எப்., தமிழ்நாடு போலீஸ் உள்பட 67 அணிகளும், பெண்கள் பிரிவில் ரைசிங் ஸ்டார், சங்கம் சினிமாஸ், இந்துஸ்தான் உள்பட 20 அணிகளும் கலந்து கொள்கின்றன. இந்த போட்டியில் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகளுக்கு முறையே தலா ரூ.40 ஆயிரம், ரூ.30 ஆயிரம், ரூ.20 ஆயிரம், ரூ.10 ஆயிரம் ரொக்கப்பரிசாக வழங்கப்படுகிறது.

இந்த தகவலை ரைசிங் ஸ்டார் கூடைப்பந்து கிளப் செயலாளர் என்.சம்பத் தெரிவித்துள்ளார்.

Next Story