மார்பக புற்றுநோய் அறிகுறிகளை முன்னரே கண்டறிவது அதனை குணப்படுத்தும் வெற்றிவாய்ப்பை எளிதாக்கும் - டாக்டர் யோகஷாலினி

உலகம் முழுவதும் அக்டோபர் மாதம் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாக அனுசரிக்கப்படுகிறது.
மார்பக புற்றுநோய் இந்தியாவில் பெண்களுக்கு வரும் புற்றுநோயில் இரண்டாம் இடம் வகிக்கிறது. மார்பக புற்றுநோய் பற்றிய சரியான புரிதல் இல்லாமை மற்றும் தேவையற்ற தயக்கங்களால் பெரும்பான்மையான மக்கள் தங்களுக்கு நோய் முற்றிய நிலையிலேயே மருத்துவரை அணுகுகின்றனர். கொரோனா வைரஸ் போன்ற பெருந்தொற்று நோய் காலத்தில் மார்பக பிரச்சினைகளுக்காக மக்கள் மருத்துவரை நாடுவதும் மிகவும் குறைந்துள்ளது.

மார்பக புற்றுநோய் அறிகுறிகளை முன்னரே கண்டறிவது அதனை குணப்படுத்துவதற்கான வெற்றிவாய்ப்பினை எளிதாக்கும். எனவே மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதமான இந்த அக்டோபர் மாதத்திலிருந்தாவது மகளிர் அனைவரும் தங்கள் உடல் நலத்திற்கான முதற்படியை எடுப்பதோடு மட்டுமல்லாமல் ஒருங்கிணைந்து புற்றுநோயை வெல்வோம்.
இவ்வாறு டாக்டர் யோகஷாலினி கூறினார்.
Related Tags :
Next Story