லக்னோ அணிக்கு பின்னடைவு..! கேப்டன் கே.எல்.ராகுல் தொடரிலிருந்து விலகல்..!


லக்னோ அணிக்கு பின்னடைவு..! கேப்டன் கே.எல்.ராகுல் தொடரிலிருந்து விலகல்..!
x

Image Courtesy : BCCI / IPL 

காயம் காரணமாக ஐ.பி.எல். எஞ்சிய ஆட்டத்தில் ராகுல் விளையாட மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

புதுடெல்லி,

ஐ.பி.எல்.போட்டியில் லக்னோ அணியின் கேப்டனாக பணியாற்றி வருபவர் லோகேஷ் ராகுல். முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவரான அவர் பெங்களூர் அணிக்கு எதிராக நேற்று முன்தினம் நடந்த ஆட்டத்தில் காயம் அடைந்தார். பீல்டிங்கின்போது அவருக்கு தொடையில் காயம் ஏற்பட்டது.

இந்த காயம் காரணமாக ஐ.பி.எல். எஞ்சிய ஆட்டத்தில் ராகுல் விளையாட மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்கேன் பரிசோதனைக்காக அவர் நாளை மும்பை செல்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது.

லக்னோ அணி இன்று மாலை நடக்கும் போட்டியில் சென்னை அணியை எதிர்கொள்கிறது. கே.எல். ராகுல் தொடரிலிருந்து விலகியதால் லக்னோ கேப்டனாக குருனால் பாண்டியா செயல்படுகிறார்.

மேலும் அடுத்த மாதம் லண்டனில் நடைபெறவுள்ள ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதியிபோட்டியில் கே.எல். ராகுல் ஆடுவதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.


Next Story