2வது டி20: அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து அயர்லாந்து திணறல்


2வது டி20: அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து அயர்லாந்து திணறல்
x
தினத்தந்தி 20 Aug 2023 4:46 PM GMT (Updated: 20 Aug 2023 7:10 PM GMT)

தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய கேப்டன் பால் ஸ்டிர்லிங் ரன் ஏதும் எடுக்காமல் அவுட்டானார்.

டப்ளின்,

ஜஸ்பிரித் பும்ரா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடி வருகிறது. இதில் டப்ளினில் நேற்று முன்தினம் இரவு நடந்த மழையால் பாதிக்கப்பட்ட முதலாவது போட்டியில் டக்வொர்த் லீவிஸ் விதிமுறைப்படி இந்திய அணி 2 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இதையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2வது டி20 போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் எடுத்தது. இந்தியா தரப்பில் கெய்க்வாட் 58 ரன், சாம்சன் 40 ரன், ரிங்கு சிங் 38 ரன், ஷிவம் துபே 22 ரன் எடுத்தனர். இதையடுத்து 186 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அயர்லாந்து அணி ஆடி வருகிறது.

அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய கேப்டன் பால் ஸ்டிர்லிங் ரன் ஏதும் எடுக்காமல் அவுட்டானார். லோர்கர் டக்கர்(0), ஹாரி டெக்டார்(7), சாம்பர்(17) ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர். இதனால், அந்த அணி தொடர்ந்து ரன்குவிக்க முடியாமல் திணறி வருகிறது.

தற்போது வரை அயர்லாந்து அணி 11 ஓவர்கள் முடிவில் 4 முக்கிய விக்கெட்டுகளை இழந்து 77 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.


Next Story