ஜாகீர் கான் சாதனை முறியடிப்பு : சர்வதேச கிரிக்கெட்டில் புவனேஸ்வர் குமார் புதிய சாதனை..!!


ஜாகீர் கான் சாதனை முறியடிப்பு : சர்வதேச கிரிக்கெட்டில் புவனேஸ்வர் குமார் புதிய சாதனை..!!
x

Image Courtesy : Twitter @BCCI

சர்வதேச கிரிக்கெட்டில் 4-வது தொடர் நாயகன் விருதை புவனேஸ்வர் குமார் நேற்று வென்றார்.

பெங்களூரு,

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடியது. இதில் முதல் இரு ஆட்டங்களில் தென்ஆப்பிரிக்காவும், அடுத்த இரு ஆட்டங்களில் இந்தியாவும் வெற்றி பெற்றதால் தொடர் 2-2 என்ற கணக்கில் சமநிலையை அடைந்தது. இந்த நிலையில் 5-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் நேற்று மழை காரணமாக கைவிடப்பட்டது.

இதனால் கோப்பை இரு அணிகளுக்கும் பகிர்ந்து அளிக்கப்பட்டது. இந்த தொடரின் நாயகனாக இந்தியாவின் புவனேஸ்வர் குமார் தேர்ந்தெடுக்கப்பட்டார். சர்வதேச கிரிக்கெட்டில் புவனேஸ்வர் குமார் பெறும் 4-வது தொடர் நாயகன் விருது இதுவாகும்..

இதன்மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக தொடர் நாயகன் விருதை வென்ற இந்திய வேகப்பந்துவீச்சாளர் என்ற சாதனையை புவனேஷ்வர் குமார் படைத்துள்ளார். இதற்கு முன் ஜாகீர் கான் மற்றும் இஷாந்த் சர்மா ஆகிய இருவரும் தலா 3 தொடர் நாயகன் விருதுகளை வென்று இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story