இந்தியா - தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதும் இன்றைய டி20 போட்டியில் மழை குறுக்கிட வாய்ப்பு..?


இந்தியா - தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதும் இன்றைய டி20 போட்டியில் மழை குறுக்கிட வாய்ப்பு..?
x

இன்றைய போட்டி மழையால் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக வானிலை தகவல்கள் தெரிவிக்கின்றன

கவுகாத்தி,

இந்தியாவுக்கு வருகை தந்துள்ள தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி மூன்று 20 ஓவர் மற்றும் 3 ஒருநாள் போட்டியில் விளையாடுகிறது. இதில் 20 ஓவர் தொடரில் திருவனந்தபுரத்தில் நடந்த முதலாவது ஆட்டத்தில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள பார்சபாரா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் இன்று நடக்கிறது.

இந்த நிலையில் இன்றைய போட்டி மழையால் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக வானிலை தகவல்கள் தெரிவிக்கின்றன .போட்டி நடைபெறும் நேரத்தில் மழை குறுக்கிட வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கவுகாத்தியில் உள்ள பார்சபாரா ஸ்டேடியத்தில் 2020 ஜனவரி அன்று நடந்த கடைசி சர்வதேச போட்டி இந்தியா-இலங்கை டி20 போட்டியம் ,தொடர்ந்து மழை காரணமாக கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Next Story