சென்னை-பஞ்சாப் அணிகள் மோதும் போட்டிக்கான டிக்கெட் வாங்க வரிசையில் குவிந்த ரசிகர்கள்..!


சென்னை-பஞ்சாப் அணிகள் மோதும் போட்டிக்கான டிக்கெட் வாங்க வரிசையில் குவிந்த ரசிகர்கள்..!
x

சென்னையில் நடைபெறும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கு டிக்கெட் வாங்குவதற்காக ரசிகர்கள் இரவு முழுவதும் காத்திருக்கின்றனர்.

சென்னை,

16-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த மாதம் 31-ந்தேதி கோலாகலமாக தொடங்கி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் நடைபெற்று வருகிறது. சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத் தில் 7 ஐ.பி.எல். ஆட்டங்களை நடத்த முடிவு செய்யப்பட்டது.

அதன்படி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வரும் 30-ஆம் தேதி நடைபெறும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சென்னை, பஞ்சாப் அணிகள் மோதிக் கொள்கின்றன.

இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று தொடங்கப்பட உள்ள நிலையில், டிக்கெட் வாங்குவதற்காக நேற்று இரவு முதலே ஆயிரக்கணக்கான ரசிகர்கள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தை சுற்றிலும் குவிந்த வண்ணம் உள்ளனர். கூட்ட நெரிசலை தவிர்க்க போலீசார் தடுப்புகளை வைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட்டுகள், ஆயிரத்து 500 ரூபாய் முதல் ஐந்தாயிரம் ரூபாய் வரை பல்வேறு விலையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நேரடி மற்றும் ஆன்லைன் மூலம் காலை 9.30 மணி முதல் டிக்கெட்டுகளை பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.


Next Story