பாகிஸ்தான் அணியின் வேகப்பந்துவீச்சு ..! இந்திய பேட்ஸ்மேன்களுக்கு கங்குலி எச்சரிக்கை


பாகிஸ்தான் அணியின் வேகப்பந்துவீச்சு ..!  இந்திய பேட்ஸ்மேன்களுக்கு கங்குலி எச்சரிக்கை
x

அனைத்து கிரிக்கெட் ரசிகர்களும் எதிர் பார்க்கும் இந்தியா -பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி நாளை நடைபெற உள்ளது.

கொழும்பு,

இந்தியாவில் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடைபெற உள்ள உலகக்கோப்பை தொடருக்கு ஆசிய அணிகள் சிறப்பாக தயாராகும் பொருட்டு இந்த முறை ஆசிய கோப்பை 50 ஓவர் வடிவில் நடத்தப்படுகிறது.

இதன்படி இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 6 அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் புதன்கிழமை தொடங்கியது. அதில் நேபாள அணியை வீழ்த்தி பாகிஸ்தான் அணி வெற்றியோடு தொடரை தொடங்கியது

இதில் அனைத்து கிரிக்கெட் ரசிகர்களும் எதிர் பார்க்கும் இந்தியா -பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி நாளை நடைபெற உள்ளது.

இந்நிலையில் இந்தியாவைப் போலவே பாகிஸ்தானுக்கு நல்ல வேகப்பந்து வீச்சாளர்களாக உள்ளனர் என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி கூறியுள்ளார்.

இது குறித்து சவுரவ் கங்குலி கூறியிருப்பதாவது:- பாகிஸ்தானுக்கு மிகச் சிறந்த பந்துவீச்சு தாக்குதல் உள்ளது. நசீம் ஷா, அப்ரிடி மற்றும் ஹாரிஸ் ரவ்ப். இந்தியாவைப் போலவே அவர்களும் நல்ல வேகப்பந்து வீச்சாளர்களாக உள்ளனர். எனவே அவர்கள் ஒரு சிறந்த பந்துவீச்சு தாக்குதல் மற்றும் இந்தியா அவர்களுக்கு எதிராக நன்றாக பேட்டிங் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story