முதல் ஒருநாள் போட்டி : இந்திய அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி


முதல் ஒருநாள் போட்டி : இந்திய அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி
x

இந்திய அணி 18.4 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 114 ரன்கள் எடுத்து அபார வெற்றி

லண்டன்,

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் இடையே 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடர் நடக்கிறது. இதன்படி இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் இன்று நடைபெற்றது.

இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. ஆட்டத்தின் தொடக்கத்திலேயே இங்கிலாந்து அணி ஜேசன் ராய், ஜானி பேர்ஸ்டா, ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், லிவிங்ஸ்டன் ஆகிய 5 முக்கிய பேட்ஸ்மேன்கள் இந்திய அணியின் பந்துவீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினர். குறிப்பாக ஜேசன் ராய், ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், லிவிங்ஸ்டன் ஆகியோர் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்து வெளியேறினர்.பின்னர் வந்த மொயீன் அலி 14 ரன்களுக்கு விக்கெட்டை பறிகொடுத்தார்.

ஒருபுறம் நிலைத்து நின்று ஆடிய கேப்டன் பட்லர் 30 ரன்களில் ஷமி பந்துவீச்சில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.இறுதியில் 25.2 ஓவர்கள் முடிவில் 10 விக்கெட்டுகளை இழந்த இங்கிலாந்து அணி 110 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.

இந்திய அணியில் பும்ரா 6 விக்கெட்டும்,ஷமி 3 விக்கெட்,பிரஷித் கிருஷ்னா 1 விக்கெட் வீழ்த்தினர்.தொடர்ந்து 111 ரன்கள் இலக்குடன் இந்திய அணி விளையாடியது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய ரோகித் சர்மா ,ஷிகர் தவான் இருவரும் சிறப்பாக விளையாடி ரன்கள் குவித்தனர்.தவான் நிதானமாக ,.ரோகித் சர்மா அதிரடியாக விளையாடி,ரன்கள் குவித்தனர் .ரோகித் சர்மா அரைசதம் கடந்தார்.இதனால் இந்திய அணி 18.4 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 114 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.ரோகித் சர்மா 76ரன்களுடன் தவான் 31ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

3 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் இந்திய அணி 1-0 என முன்னிலை வகிக்கிறது.2வது போட்டி நாளை மறுநாள் (வியாழக்கிழமை ) நடக்கிறது.

1 More update

Next Story