டெல்லி அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெறாதது வேதனை அளிக்கிறது - மிட்செல் மார்ஷ்


டெல்லி அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெறாதது வேதனை அளிக்கிறது - மிட்செல் மார்ஷ்
x

ஐ.பி.எல். இறுதிப்போட்டிக்கு டெல்லி அணி தகுதி பெறாதது வேதனை அளிப்பதாக மிட்செல் மார்ஷ் கூறியுள்ளார்.

கொழும்பு,

ஆஸ்திரேலியா அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட்,5ஒரு நாள்,3 இருபது ஓவர் போட்டிகளில் விளயாட உள்ளது.இத்தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் இடம் பெற்றுள்ள மிட்செல் மார்ஷ் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது ஐ.பி.எல் தொடரில் டெல்லி அணி இறுதி போட்டிக்கு தகுதி பெறாதது குறித்து அவர் கூறியதாவது,

நாங்கள் (டெல்லி அணி) ஐ.பி.எல். இறுதிப்போட்டிக்கு முன்னேற முடியாமல் போனது வேதனை அளித்தது. ஐ.பி.எல். போட்டி தொடக்கத்தில் எனக்கு சிறிய காயம் ஏற்பட்டது. அதன் பிறகு ஒரு போட்டியில் விளையாடினேன்.திடீரென கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் சற்று நடுக்கம் ஏற்பட்டது.

அதன்பின்னர் மீண்டும் போட்டிகளில் விளையாடியது மகிழ்ச்சியாக இருந்தது. நான் 3-வது வரிசையில் பேட்டிங் செய்வதை விரும்புகிறேன். அதை 20 ஓவர் கிரிக்கெட்டில் எனது சிறந்த நிலைப்பாடு என்று நான் நிச்சயமாக உணர்கிறேன்.

மேலும் பவர்பிளேவில் பேட்டிங் செய்வதை விரும்பினேன். என்னால் 3-வது வரிசையில் தொடர்ந்து நிலைத்து ஆட முடியும் என்று நம்புகிறேன். சர்வதேச கிரிக்கெட் மிகவும் கடினமானது. உலகில் எந்த அணிக்கு எதிராகவும் எனது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.


Next Story