கடைசி ஒருநாள் போட்டி: கள்ளச்சந்தையில் டிக்கெட் விற்ற 12 பேர் கைது..!


கடைசி ஒருநாள் போட்டி: கள்ளச்சந்தையில் டிக்கெட் விற்ற 12 பேர் கைது..!
x

இந்தியா-ஆஸ்திரேலியா கடைசி ஒரு நாள் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்று வருகிறது.

சென்னை,

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் மும்பையில் நடந்த தொடக்க ஆட்டத்தில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்திலும், விசாகப்பட்டினத்தில் நடந்த 2-வது ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 10 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது.

இந்த நிலையில் இவ்விரு அணிகளில் கோப்பை யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்று வருகிறது. சேப்பாக்கம் மைதானத்தில் 3½ ஆண்டுகளுக்கு பிறகு ஒருநாள் போட்டி நடைபெறுவதால் மைதானத்தில் ரசிகர்கள் குவிந்துள்ளனர்.

இந்த நிலையில், இந்தியா-ஆஸ்திரேலியா 3-வது கிரிக்கெட் போட்டி சென்னையில் நடைபெற்று வரும் நிலையில் மைதானத்திற்கு வெளியே போட்டிக்கான டிக்கெட்டை கள்ளச் சந்தையில் விற்ற 12 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். ரூ.1,500 டிக்கெட்டை ரூ.10 ஆயிரம் வரை விற்ற 12 பேரிடம் திருவல்லிக்கேணி விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் 12 பேரிடம் இருந்து 29 டிக்கெட்டுகளை

பறிமுதல் செய்தனர்.


Next Story