இங்கிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டி : இந்திய அணி பந்துவீச்சு தேர்வு


இங்கிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டி : இந்திய  அணி பந்துவீச்சு தேர்வு
x
தினத்தந்தி 17 July 2022 9:38 AM GMT (Updated: 17 July 2022 9:45 AM GMT)

டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார்

மான்செஸ்டர்,

இங்கிலாந்துக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. தொடக்க ஆட்டத்தில் இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்திலும், 2-வது ஆட்டத்தில் இங்கிலாந்து 100 ரன்கள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது. இந்த நிலையில் இவ்விரு அணிகளில் தொடர் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி மான்செஸ்டரில் உள்ள ஓல்டுடிராப்போர்டில் இன்று நடக்கிறது.

இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது .அதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார்.அதன்படி இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.

இந்தியா: ரோகித் சர்மா (கேப்டன்), ஷிகர் தவான், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, முகமது சிராஜ், யுஸ்வேந்திர சாஹல், பிரசித் கிருஷ்ணா

இங்கிலாந்து: ஜாசன் ராய், ஜானி பேர்ஸ்டோ, ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர் (கேப்டன்), விலிங்ஸ்டன், மொயீன் அலி, டேவிட் வில்லி, கிரேக் ஓவர்டான் , பிரைடன் கார்ஸ், ரீஸ் டாப்லே.


Next Story