டி20 உலகக்கோப்பை: இறுதி போட்டிக்கான நடுவர்களை அறிவித்தது ஐசிசி


டி20 உலகக்கோப்பை: இறுதி போட்டிக்கான நடுவர்களை அறிவித்தது ஐசிசி
x

Image Courtesy: BCCI

பாகிஸ்தான்- இங்கிலாந்து போட்டிக்கான நடுவர்களை ஐசிசி அறிவித்துள்ளது.

மெல்போர்ன்,

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் 2022 ஐசிசி 8-வது டி20 உலக கோப்பையின் இறுதி போட்டி நாளை மறுதினம் நடைபெறுகிறது. மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடக்க உள்ள இந்த போட்டியில் பாகிஸ்தான்- இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.

இந்த நிலையில் இறுதி போட்டியில் பணியாற்றவுள்ள நடுவர்களின் பட்டியலை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி குமார் தர்மசேனா மற்றும் மரைஸ் எராஸ்மஸ் ஆகியோர் கள நடுவர்களாகவும், கிறிஸ் கேவ்னி மூன்றாவது நடுவராகவும் செய்லபடவுள்ளனர். நான்காவது நடுவராக பால் ரீபெல் செயல்படுவார். ரஞ்சன் மதுகல்லே போட்டி நடுவராக (ரெப்ரீ) இருப்பார் என ஐசிசி அறிவித்துள்ளது.


Next Story