டி20 போட்டியில் ஒரு வருடத்தில் அதிக ரன்கள்- ஷிகர் தவானின் சாதனையை முறியடித்தார் சூர்யகுமார் யாதவ்


டி20 போட்டியில் ஒரு வருடத்தில் அதிக ரன்கள்- ஷிகர் தவானின் சாதனையை முறியடித்தார் சூர்யகுமார் யாதவ்
x

Image Courtesy: ICC 

டி20 கிரிக்கெட்டில் ஒரு வருடத்தில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர் என்ற சாதனையை சூர்யகுமார் படைத்துள்ளார்.

திருவனந்தபுரம்,

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதைத் தொடர்ந்து, தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக நேற்று நடந்த முதல் டி20 போட்டியிலும் இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

சமீப காலமாக தொடர்ந்து ரன்களை குவித்து வரும் அவர். டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியின் துருப்பு சீட்டாக விளங்குகிறார். நேற்றைய போட்டியில் 50 ரன்களை எடுத்ததை தொடர்ந்து இந்த வருடம் 732 ரன்களை எடுத்துள்ள அவர், சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஒரு காலண்டர் வருடத்தில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

இதற்கு முன் 2018 ஆம் ஆண்டு ஷிகர் தவான் 689 ரன்கள் அடித்து இருந்ததே ஒரு வருடத்தில் டி20 போட்டிகளில் இந்திய வீரர் அடித்த அதிகபட்ச ரன்னாக இருந்தது. தற்போது அந்த சாதனையை சூர்யகுமார் யாதவ் முறியடித்துள்ளார்.


Next Story