தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடர் : இந்திய அணியில் வாஷிங்டன் சுந்தர் சேர்ப்பு


தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடர் : இந்திய அணியில் வாஷிங்டன் சுந்தர் சேர்ப்பு
x

தீபக் சாஹருக்கு பதிலாக வாஷிங்டன் சுந்தர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

லக்னோ,

இந்திய மண்ணில் சுற்றுப்பயணம் செய்து வரும் தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி, 3 போட்டிகள் கொண்ட டி-20 மற்றும் ஒருநாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில், முதலில் நடந்த டி-20 தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்தியா வென்றது. இந்நிலையில், இவ்விரு அணிகள் மோதிய முதலாவது ஒருநாள் போட்டி உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள அடல் பிஹாரி வாஜ்பாய் மைதானத்தில் நடைபெற்றது.இந்த போட்டியில் இந்திய அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

இந்த நிலையில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் தீபக் சாஹருக்கு பதிலாக வாஷிங்டன் சுந்தர் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.காயம் காரணமாக லக்னோவில் நடந்த முதல் போட்டியில் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

2வது ஒருநாள் போட்டி ராஞ்சியில் அக்டோபர் 9ஆம் தேதியும், கடைசி ஒருநாள் போட்டி அக்டோபர் 11ஆம் தேதி புதுடெல்லியிலும் நடைபெறவுள்ளது.


Next Story