டி20 கிரிக்கெட்டில் அச்சமின்றி விளையாடவேண்டும் - இந்திய இளம் வீரர்களுக்கு லட்சுமண் அட்வைஸ்..!


டி20 கிரிக்கெட்டில் அச்சமின்றி விளையாடவேண்டும் -  இந்திய இளம் வீரர்களுக்கு லட்சுமண் அட்வைஸ்..!
x

நியூசிலாந்துக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி அங்கு மூன்று 20 ஓவர் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது.

வெலிங்டன்,

நியூசிலாந்துக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி அங்கு மூன்று 20 ஓவர் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. இந்தியா- நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி வெலிங்டனில் நாளை (வெள்ளிக்கிழமை) இந்திய நேரப்படி பகல் 12 மணிக்கு தொடங்கி நடக்கிறது. இதையொட்டி இந்திய பொறுப்பு கேப்டன் ஹர்திக் பாண்ட்யா நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.நியூசிலாந்திற்கு எதிரான தொடரில் கோலி, ரோகித் சர்மா ஆகியோருக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. இதனால் டி20 தொடரில் இந்திய அணியை ஹர்திக் பாண்டியா வழிநடத்துகிறார். ஒருநாள் போட்டியில் தவான் அணியை வழிநடத்துகிறார். இந்த தொடரில் இந்திய அணியின் பயிற்சியாளராக வி.வி.எஸ்.லட்சுமண் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் பயிற்சியாளரான லஷ்மண் அச்சமின்றி ஆட்டத்தை வெளிப்படுத்துங்கள் என இளம் வீரர்களுக்கு அட்வைஸ் வழங்கியுள்ளார். இது குறித்து லட்சுமண் கூறுகையில் ;

நாம் சுதந்திரமாக, அச்சமின்றி விளையாடுவது அவசியம். இந்த எண்ணத்துடன் களத்தில் சென்று விளையாடக் கூடிய வீரர்கள் எங்களிடம் உள்ளனர். இந்த தகவல் கேப்டன் மற்றும் நிர்வாகம் மூலம் வீரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதுவேளையில், சீதோஷண நிலை, அப்போதைய போட்டியின் சூழ்நிலை ஆகியவற்றை மனதில் வைத்துக் கொண்டு யுக்திகளை உருவாக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகமான பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பேட்டிங் செய்ய முடியும் என்றால்,

டாப் ஆர்டர் வீரர்களில் சுதந்திரமாக நெருக்கடி இன்று தங்களது ஆட்டத்தை வெளிப்படுத்த முடியும். இதுதான் டி20 விளையாட்டிற்கு தேவை. ஏராளமான அணிகள் இந்த முறையை கொண்டு வர முயற்சிக்கும் வகையில் அப்படிபட்ட வீரர்களை அடையாளம் காணும் தேர்வு நடவடிக்கையை மேற்கொள்ளும். ஹர்திக் பாண்ட்யா அற்புதமான கேப்டன். ஐ.பி.எல். கிரிக்கெட்டில் என்ன செய்தார் என்பதை நாம் பார்த்தோம். அயர்லாந்தில் இருந்து அவரிடம் குறிப்பிட்ட நேரத்தை செலவழித்துள்ளேன். அவரது இருப்பும் பணி நெறியும் முன்னுதாரணமானது. அவர் ஒரு வீரர்களின் கேப்டன் மற்றும் அணுகக்கூடியவர். வீரர்கள் அவரை நம்புகிறார்கள். அவர் முன்மாதிரியாக வழி நடத்துகிறார் என்றார்.


Next Story