டிஎன்பிஎல் தொடருக்கான வீரர்கள் ஏலம்: சேப்பாக் சூப்பர் கில்லீஸ் எப்படி இருக்கும்? - அணியின் உரிமையாளர் சிவந்தி ஆதித்தன் பேட்டி


x

டி.என்.பி.எல். ஏலம் தொடர்பாக சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி உரிமையாளர் சிவந்தி ஆதித்தன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது சேப்பாக் சூப்பர் கில்லீஸ் எப்படி இருக்கும்? என கூறினார்.

சென்னை

தமிழ்நாடு பிரீமியர் லீக் (டிஎன்பிஎல்) 2023 ஏலம் இன்று மகாபலிபுரத்தில் நடைபெற்று வருகிறது. ஏலத்தில் மாநிலத்தைச் சேர்ந்த மொத்தம் 942 வீரர்கள் உள்ளனர்.

ஏலத்தில் வீரர்களுக்கான அதிகபட்ச அடிப்படை விலை ரூ.10 லட்சம் என்றாலும், ரவிச்சந்திரன் அஷ்வின், நாராயண் ஜெகதீசன் மற்றும் ஷாருக்கான் போன்ற முக்கிய வீரர்கள் தங்கள் உரிமையாளர்களால் தக்கவைக்கப்பட்டு உள்ளனர்.

முதலில் ஏ பிரிவு வீரர்கள் ஏலம் நடந்தது. இதில் இந்திய அணிக்காக விளையாடிய 5 வீரர்கள் இடம் பெற்றிருந்தனர். அதில் விஜய் சங்கரை 10.25 லட்சத்துக்கு திருப்பூர் தமிழன்ஸ் அணியும் வாஷிங்டன் சுந்தரை மதுரை பாந்தர்ஸ் அணி ரூ.6.75 லட்சத்துக்கு ஏலம் எடுத்தது.

மூன்றாவது வீரராக நடராஜனை 6.25 லட்சத்துக்கு திருச்சி அணி ஏலம் எடுத்தது. சந்தீப் வாரியரை நெல்லை அணி ரூ.8.5 லட்சத்துக்கு விலைக்கு வாங்கியது.

சிவி வருணை மதுரை பாந்தர்ஸ் அணி ரூ.6.75 லட்சத்துக்கு வாங்கியது. இதனை தொடர்ந்து பி பிரிவு வீரர்கள் ஏலம் நடைபெற்றது.

ஐபிஎல் போட்டியில் ஆர்சிபி அணிக்காக தேர்வாகி உள்ள சோனு யாதவை நெல்லை ராயல் கிங்ஸ் அணி அதிக தொகைக்கு ஏலம் எடுத்தது. அவர் ரூ.15.20 லட்சத்துக்கு ஏலம் போனார்.

இந்நிலையில் சஞ்சய் யாதவை சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 17.60 லட்சத்துக்கு ஏலம் எடுத்தது. இதன் மூலம் இதுவரை நடந்த ஏலத்தில் அதிக தொகையாக இது இருந்துள்ளது. முன்னதாக ஹரிஷ் குமாரை 12.80 லட்சத்துக்கும் அபராஜித்தை ரூ.10 லட்சத்துக்கும் பிரதோஷ் 5 லட்சத்துக்கும் அதே அணி விலைக்கு வாங்கியது.

இதனை தொடர்ந்து பி பிரிவு வீரர்கள் ஏலம் நடைபெற்றது. ஏ பிரிவு வீரர்களில் ஆர்வம் காட்டாத சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி பி பிரிவில் இடம் பெற்ற பாபா அப்ரஜித்தை 10 லட்சத்துக்கு ஏலம் எடுத்தது. தொடர்ந்து ஏலம் நடைபெற்று வருகிறது.

டி.என்.பி.எல். ஏலம் தொடர்பாக சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி உரிமையாளர் சிவந்தி ஆதித்தன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியில் வழக்கமான 3 இடது கை ஆட்டக்காரர்கள் இருப்பார்கள். அணியில் சமமான அளவுக்கு தகுதியான வீரர்கள் உள்ளனர் என கூறினார்.


Next Story