ஐ.பி.எல் தொடரில் இருந்து விலகிய வீரர்கள் - மாற்று வீரர்களை அறிவித்த அணி நிர்வாகங்கள்


ஐ.பி.எல் தொடரில் இருந்து விலகிய வீரர்கள் - மாற்று வீரர்களை அறிவித்த அணி நிர்வாகங்கள்
x

Image Courtesy: AFP / @IPL

ஐ.பி.எல் தொடரில் இருந்து விலகிய வீரர்களுக்கு பதிலாக குஜராத், ராஜஸ்தான் அணி நிர்வாகங்கள் மாற்று வீரர்களை அறிவித்துள்ளன.

மும்பை,

17-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி மே 26-ந்தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடக்கிறது. இன்று நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோத உள்ளன.

இந்நிலையில் நடப்பு தொடருக்காக ராஜஸ்தான் அணியில் இடம் பெற்றிருந்த ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் ஆடம் ஜாம்பா தொடரில் இருந்து விலகி உள்ளார். மேலும் குஜராத் அணியால் ரூ. 3.6 கோடிக்கு வாங்கப்பட்ட ராபின் மின்ஸ் என்ற இளம் இந்திய வீரரும் நடப்பு ஐ.பி.எல் தொடரில் இருந்து விலகி உள்ளார்.

இதையடுத்து இந்த இரு வீரர்களுக்கும் பதிலாக மாற்று வீரர்களை குஜராத் மற்றும் ராஜஸ்தான் அணி நிர்வாகங்கள் தற்போது அறிவித்துள்ளன. அதன்படி ராஜஸ்தான் அணியில் ஆடம் ஜாம்பாவுக்கு பதிலாக இந்தியாவை சேர்ந்த தனுஷ் கோட்யான் அவரது அடிப்படை விலையான ரூ.20 லட்சத்திற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

மேலும் குஜராத் அணியில் ராபின் மின்ஸ்-க்கு பதிலாக கர்நாடகாவை சேர்ந்த விக்கெட் கீப்பர், பேட்ஸ்மேனான பி.ஆர். ஷரத் அவரது அடிப்படை விலையான ரூ.20 லட்சத்திற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.



Next Story