பிரப்சிம்ரன் சிங் அபார சதம்..! 168 ரன்களை இலக்காக நிர்ணயித்தது பஞ்சாப்


பிரப்சிம்ரன் சிங் அபார சதம்..! 168 ரன்களை இலக்காக நிர்ணயித்தது பஞ்சாப்
x

பிரப்சிம்ரன் சிங் 61 பந்துகளில் சதம் அடித்தார்

புதுடெல்லி,

16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது . டெல்லி அருண்ஜெட்லி ஸ்டேடியத்தில் இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 59-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ்-பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது . அதில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் டேவிட் வார்னர் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்தது.

தொடக்க வீரர்களாக ஷிகர் தவான் , பிரப்சிம்ரன் சிங் களமிறங்கினர். தொடக்கத்தில் தவான் 7 ரன்களில் வெளியேறினார். அடுத்து வந்த லிவிங்ஸ்டன் 4 ரன்கள் , ஜிதேஷ் ஷர்மா 5 ரன்கள் , சாம் கரன் 20 ரன்களில் வெளியேறினர். விக்கெட்டுகள் இழந்தாலும் மறுமுனையில் பிரப்சிம்ரன் சிங் சிறப்பாக ஆடி அரைசதம் அடித்தார்.

பின்னர் தொடர்ந்து அதிரடி காட்டிய அவர் 61 பந்துகளில் சதம் அடித்தார்,. அவர் 103 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் 7 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் எடுத்தது.


Next Story