ரிஷப் பண்ட் அதிரடி சதம் : இங்கிலாந்தை வீழ்த்தி தொடரை வென்றது இந்திய அணி..!


ரிஷப் பண்ட் அதிரடி சதம் : இங்கிலாந்தை வீழ்த்தி தொடரை வென்றது இந்திய அணி..!
x
தினத்தந்தி 17 July 2022 5:30 PM GMT (Updated: 17 July 2022 5:40 PM GMT)

இந்த வெற்றியால் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள்போட்டி தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது.

மான்செஸ்டர்,

இங்கிலாந்துக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. தொடக்க ஆட்டத்தில் இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்திலும், 2-வது ஆட்டத்தில் இங்கிலாந்து 100 ரன்கள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது. இந்த நிலையில் இவ்விரு அணிகளில் தொடர் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி மான்செஸ்டரில் உள்ள ஓல்டுடிராப்போர்டில் இன்று நடந்தது . இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது .அதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார்.அதன்படி இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக ஜேசன் ராய் ,பேர்ஸ்டோ களமிறங்கினர்.தொடக்கத்தில் சிராஜ் வீசிய ஓவரில் பேர்ஸ்டோ ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.பின்னர் வந்த ஜோ ரூட் வந்த வேகத்தில் அதே ஓவரில் ரன் எதுவும் எடுக்காமல் நடையை கட்டினார்.

அடுத்த வந்த பென் ஸ்டோக்ஸ் ,ராய் இருவரும் இணைந்து சிறப்பாக விளையாடினர்.ஒரு புறம் ராய் அதிரடியாக ரன்கள் குவித்தார்.அணியின் ஸ்கோர் 66 ரன்னாக இருந்த போது ராய் 41 ரன்களில் ஹர்திக் பாண்டியா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.அடுத்து ஸ்டோக்ஸ் 27 ரன்களில் நடையை கட்டினார்.இதனால் 74 ரன்களுக்கு இங்கிலாந்து அணி 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் ஜோஸ் பட்லர் ,மொயீன் அலி இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர்.இருவரும் பந்துகளை பவுண்டரிக்கு விரட்டினர். மொயீன் அலி 34 ரன்களில் ஆட்டமிழந்தார்.மறுபுறம் சிறப்பாக விளையாடிய கேப்டன் பட்லர் அரைசதம் அடித்தார்.அவருடன் லிவிங்ஸ்டன் அதிரடியாக விளையாடி 27 ரன்களில் ஆட்டமிழந்தார் .,பட்லர் 60 ரன்களில் ஆட்டமிழந்தார். கடைசி நேரத்தில் டேவிட் வில்லே ,ஓவர்டன் ரன்கள் எடுத்தனர் . இறுதியில் இங்கிலாந்து அணி 45.5 ஓவர்கள் முடிவில் 10 விக்கெட் இழப்பிற்கு 259 ரன்கள் எடுத்தது.இந்திய அணி சார்பில் பாண்டியா 4 விக்கெட்டும்,சிராஜ் ,சாஹல் தலா 2 விக்கெட் வீழ்த்தினார்.தொடர்ந்து 260 ரன்கள் இலக்குடன் இந்திய அணி விளையாடியது.

தொடக்க வீரர்கள் ரோகித் சர்மா ,ஷிகர் தவான் ஆகியோர் களமிறங்கினர்,தொடக்கத்தில் தவான் 1ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.தொடர்ந்து ரோகித் சர்மா 17ரன்களில் வெளியேறினார்.அடுத்து வந்த விராட் கோலி 17 ரன்களில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.

அடுத்து ரிஷப் பண்ட் ,சூர்ய குமார் யாதவ் இருவரும் சிறப்பாக விளையாடி ரன்கள் சேர்த்தனர்.அணியின் ஸ்கோர் 74ரன்னாக இருந்த போது ,சூர்ய குமார் யாதவ் 16 ரன்களில் வெளியேறினார்.பின்னர் வந்த ஹார்திக் பாண்டியா ரிஷப் பண்டுடன் இணைந்து சிறப்பாக விளையாடினார்.இருவரும் நிலைத்து ஆடி ரன்கள் சேர்த்தனர்,

சிறப்பாக விளையாடிய இருவரும் அரைசதம் கடந்தனர்.அணியின் ஸ்கோர் 204 ஆக இருந்த போது அதிரடியாக விளையாடிய பாண்டியா 71 ரன்களில் வெளியேறினார் .

பின்னர் அதிரடி காட்ட தொடங்கிய பண்ட் இங்கிலாந்து பந்துவீச்சை துவம்சம் செய்தார்.அதிரடியாக விளையாடிய பண்ட் சதம் அடித்து அசத்தினார்.இங்கிலாந்து அணியின் டேவிட் வில்லே வீசிய ஒரு ஓவரில் தொடர்ந்து 5 பவுண்டரிகள் விரட்டினார் பண்ட் .

இறுதியில் இந்திய அணி 42.1 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.ரிஷாப் பண்ட் 113 பந்துகளில்125 ரன்களுடனும் ,ஜடேஜா7 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.இந்த வெற்றியால் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள்போட்டி தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது.


Next Story