விராட் கோலியை பாராட்டிய சச்சின் தெண்டுல்கர்


விராட் கோலியை பாராட்டிய சச்சின் தெண்டுல்கர்
x

500-வது சர்வதேச போட்டியில் சதம் அடித்த கோலியை கிரிக்கெட் ஜாம்பவான் தெண்டுல்கர் பாராட்டியுள்ளார்.

மும்பை,

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் விராட் கோலி அபாரமாக விளையாடி சதம் அடித்தார். அவர் கிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கு பிறகு வெளிநாட்டு மண்ணில் டெஸ்டில் சதம் அடித்துள்ளார். கடைசியாக 2018-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பெர்த் மைதானத்தில் சதம் அடித்தார். 34 வயதான விராட் கோலி 111-வது டெஸ்டில் 29-வது சதத்தை பதிவு செய்தார்.

இதன்மூலம் அவர் பிராட்மேன் சாதனையை சமன் செய்தார். பிராட்மேன் 52 டெஸ்டில் 29 சதம் அடித்து இருந்தார். டெஸ்டில் அதிக சதம் அடித்த வீரர்களில் விராட், பிராட்மேனுடன் இணைந்து 16-வது இடத்தில் உள்ளார்.500-வது சர்வதேச போட்டியில் சதம் அடித்த விராட் கோலியை கிரிக்கெட் ஜாம்பவான் தெண்டுல்கர் பாராட்டியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் கூறும்போது,

"மற்றொரு நாள், மற்றொரு சதத்தை விராட் கோலி எடுத்துள்ளார். அவரது ஆட்டம் சிறப்பாக இருந்தது" என்றார்.


Next Story