சஞ்சு சாம்சன் அபார சதம்...! தென் ஆப்பிரிக்க அணிக்கு 297 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இந்தியா


சஞ்சு சாம்சன் அபார சதம்...! தென் ஆப்பிரிக்க அணிக்கு 297  ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இந்தியா
x

Image : ICC 

தென் ஆப்பிரிக்கா அணி சார்பில் பியூரன் ஹென்ட்ரிக்ஸ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்

பார்ல்,

இந்திய அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலாவதாக நடைபெற்ற டி20 தொடர் 1-1 என சமனில் முடிந்தது. இதையடுத்து ஒருநாள் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் 2 போட்டிகள் முடிவடைந்த நிலையில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றதால் தொடர் 1-1 என்ற புள்ளிகணக்கில் சமனில் உள்ளது. இந்த நிலையில் இந்தியா - தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி பார்ல் நகரில் உள்ள போலன்ட் பார்க் மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது..

.இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணியின் கேப்டன் மார்க்ரம் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.

தொடக்கத்தில் ரஜத் படிதார் 22 ரன்களும் , சாய் சுதர்சன் 10 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். தொடர்ந்து கே.எல். ராகுல் 21 ரன்களுக்கு வெளியேறினார்.

பின்னர் வந்த சஞ்சு சாம்சன் சிறப்பாக விளையாடினார். நிலைத்து ஆடி ரன்கள் குவித்த அவர் அரைசதம் அடித்தார். மறுபுறம் திலக் வர்மா சிறப்பாக ஆடி அரைசதம் அடித்து 52 ரன்களில் வெளியேறினார்.

மறுபுறம் பந்துகளை பவுண்டரி , சிக்சருக்கு பறக்க விட்ட சஞ்சு சாம்சன் சதம் அடித்து அசத்தினார். இறுதியில் 50 ஓவர்களில் இந்திய அணி 8 விக்கெட் இழப்பிற்கு 296 ரன்கள் எடுத்தது.

தென் ஆப்பிரிக்கா அணி சார்பில் பியூரன் ஹென்ட்ரிக்ஸ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். தொடர்ந்து 297 ரன்கள் இலக்குடன் தென்-ஆப்பிரிக்கா அணி விளையாட உள்ளது.


Next Story